பெருந்தோட்டக் கைத்தொழிலை அழிவின் விளிம்புக்கு கொண்டு வந்தது யார்?

Published By: Daya

07 Feb, 2020 | 10:51 AM
image

கடந்த சில வரு­டங்­க­ளாக தொழிற்­சங்­கங்­களால் முன்­வைக்­கப்­பட்­டதும்  இறு­தி­யாக அமைச்­ச­ர­வை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட 1,000 ரூபா  வேத­னத்தால் பெருந்­தோட்­டக் கைத்­தொ­ழி­லுக்கு அழிவுநிலை ஏற்­ப­டுமோ என பிராந்­திய பெருந்­தோட்டக் கம்­ப­னிகள் (RPC) நம்­பிக்­கை­யி­ழந்­துள்­ளன. சிறிய தோட்ட உரி­மை­யா­ளர்கள் விசே­ட­மாக தென் பிராந்­தி­யத்­தி­லுள்­ள­வர்கள் மீள நட்டு தோட்­டத்தை சிறந்த முறையில் பரா­ம­ரித்து வரு­கின்­றனர். அவர்­களைப் போலல்­லாது ஆகக் குறைந்­த­ளவு முத­லீடு செய்து  கொழுந்தைப் பறித்து தேயிலை உற்­பத்தி செய்து தோட்­டங்­களை முழு­மை­யாக  RPC புறக்­க­ணிப்­பதால் தேயிலைக் கைத்­தொழில் சில வரு­டங்­களில் தானா­கவே அழிந்­து­விடும். தென்­னி­லங்­கையில் விளைச்சல் ஹெக்டர் ஒன்­றுக்கு 2300 கிலோ அதே வேளை RPC தோட்­டங்­களில் ஹெக்டர் ஒன்றின் விளைச்சல் 1000 கிலோ ஆகும். சிறு­தோட்ட உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கும் RPCக்­கு­மி­டை­யி­லான மொத்த வரு­டாந்த உற்­பத்தி விகிதம் 70:30 ஆக உள்­ளது. இது வர­லாற்றில் நிலை­நாட்­டப்­பட்ட (30:70) என்ற உற்­பத்தி விகி­தத்தின் தலை­கீழா­ன­தொன்­றாகும்.

வேலை­யாட்கள் எப்­போதும் பயிரை கொண்­டு­வ­ரவே விரும்­புவர். ஒரு­போதும் இளம் தளிரை வேண்­டு­மென்று பறிக்­கா­தி­ருக்­க­மாட்­டார்கள். மற்றும் குறைந்­த­ளவு தளிர்­க­ளையோ கொண்டுவர­மாட்­டார்கள். தென் மாகா­ணத்தில் தின­சரி 24 இலி­ருந்து 26 கிலோ பறிப்­பது வழமை. ஆனால், மலை­ய­கத்தில் பறிக்­கப்­படும் எடை 16 இலி­ருந்து 18கிலோ ஆகும். ஏனெனில், அங்கு பறிப்­ப­தற்கு கொழுந்து இல்லை. 2012ஆம் ஆண்டு நடை­பெற்ற தோட்ட உரி­மை­யா­ளர்கள் சங்க வரு­டாந்த பொதுக்­கூட்­டத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்துகொண்டு சொற்­பொழி­வாற்­று­கையில்  மஹேந்­திர அம­ர­சூரிய   இவ்­வாறு கூறினார். மனி­தனால் உற்­பத்தி செய்­யப்­ப­டும்­போது பல்­வித சவால்­களை எதிர்­கொள்ள நேரிடும். முதலில் பயிரின் விளைச்­சலை அதி­க­ரிக்கும் வரை தோட்­டத்தில் உள்­ளதைவிட கூடு­த­லாக தொழி­லா­ளிகள் அறு­வடை செய்வர் என எதிர்­பார்க்க முடி­யாது.  எனினும் பெருந்­தோட்­டக்­கைத்­தொழில் சீர்­கெட்­டுப்­போ­வ­தற்­கான பொறுப்பு RPC ஐயே சாரும். இப்­பி­ரச்­சி­னைக்கு தர்க்க ரீதி­யான தீர்­வாக அவர் கூறிய ஆலோ­சனை யாதெனில் பயிரின் உற்­பத்தி திறனை பெருக்­கு­வ­தாயின் தேயிலை மற்றும் ரப்பர் மரங்கள் மீள நடப்­ப­ட­வேண்டும்  என்­ப­தாகும்.

RPC கம்­ப­னிகள் முத­லீடு செய்து மீள் நட்டு பெருந்­தோட்­டங்­களை அபி­வி­ருத்தி செய்யும் என்னும் எதிர்­பார்ப்பில் 5000 இலி­ருந்து 7000 ஹெக்டார் விஸ்­தீ­ர­ணமுள்ள பெருந்­தோட்­டங்கள் வெறும்  100 மில்­லியன் ரூபாவுக்கு RPCக்கு அர­சாங்­கத்­தினால் விற்­கப்­பட்­டது. ஆனால் கம்­ப­னிகள் ஆகக் குறைந்த முத­லீட்­டிற்கு அறு­வ­டையை மட்டும் பெற்று அவற்றை விற்­பனை செய்து இலா­பத்தை ஈட்­டி­யது. அது மட்­டு­மன்றி அங்­குள்ள மரங்கள் மற்றும் ஓட்டை உடை­ச­ல்க­ளையும் விற்று பண­மாக்­கின.

தேயிலை ஆராய்ச்சி நிறு­வனம் (TRI) பெருந்­தோட்­டத்தை தனியார் மயப்­ப­டுத்தி 10 வரு­டத்தின் பின் 2003ஆம் ஆண்டு நடத்­தப்­பட்ட ஆய்­வொன்­றைப்­பற்றி ஆய்­வாளர்  ஆர்.கே. நாதனேல்   2005.01.-26ஆம் திகதி த ஐலன்ட் பத்­தி­ரி­கையில் பிர­சு­ரிக்­கப்­பட்ட தனது கட்­டு­ரையில் எழு­தி­யுள்ளார். ஒவ்­வொரு தோட்­டங்­க­ளுக்கும் சென்று இவ் ஆய்வு நடத்­தப்­பட்­டுள்­ளது.  இப் பத்து ஆண்டு காலத்தில் 0.07 வீதம் மட்­டுமே மீள் நடுகை செய்­யப்­பட்­டுள்­ளது என கண்­டு­கொள்­ளப்­பட்­டது. அன்­றி­லி­ருந்து  RPC  தோட்­டங்­களின் நிலைவரம் பற்­றிய விப­ரங்கள் கிடைக்­க­வில்லை. தேயிலைப் பற்­றை­யொன்றின் பயன்­தரும் வாழ்வு சீட்­டிலிங் தேயி­லைக்கு 50 வரு­டங்­களும்  VP  தேயி­லைக்கு 30 வரு­டங்­க­ளுமாகும். ஆகையால் மீள்­ந­டுகை  வரு­ட­மொன்­றுக்கு 2 இலி­ருந்து 3 வீதம் வரை செய்­யப்­பட்­டி­ருத்தல் வேண்டும். தமது 27 வருட முகா­மைத்­துவ காலத்தில் RPCகள் இவ் விகி­தா­சா­ரத்தை கடைப்­பிடித்­தி­ருந்தால் அவர்கள் முகா­மைத்­துவம் செய்யும் தோட்­டங்கள் 50 வீதத்தை விட அதி­க­மாக மீள் நடப்­பட்டு விளைச்சல் அதி­க­ரித்து தென்­னி­லங்­கையைப் போல் வேலை­யாட்­களும் ஆக்­க­வ­ள­மு­டை­யவர்களா­யி­ருந்­தி­ருப்பர்.

ஆர்.கே. நாதனேல்  RPC தோட்­டங்­க­ளி­லுள்ள தேயிலைப் பற்­றை­களின் வய­து­ பற்­றிய ஆய்­வி­லி­ருந்து கீழ்­வரும் தர­வு­களை வழங்­கு­கிறார்.

ஆதலால் மேற்­கு­றிப்­பிட்ட ஆய்வின் 20 வரு­டங்­களின் பின்­னரும் கூட RPC ஆனது மர­ணித்­துக்­கொண்­டி­ருக்கும் தேயிலைப் பற்­றை­க­ளி­லி­ருந்து இப்­போதும் தளிர்­களை கொய்து வரு­வ­துடன் உற்­பத்தித்திறனை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஊதி­யத்தை வேலை­யாட்கள் ஏற்­றுக்­கொள்­வார்கள் என அது எதிர்­பார்க்­கி­றது.

RPC நீண்­ட­கா­ல­மாக உற்­பத்தி திறனை அடிப்­ப­டை­யாகக் கொண்ட ஊதி­யத்தை வழங்க வேண்­டு­மென வாதாடிக்கொண்­டு­வ­ரு­கி­றது. ஏனைய விட­யங்கள் சம­மாக இருப்பின் துண்டு கணக்கு நியா­ய­மா­யி­ருக்கும் என்­பது கருத்­தாகும். பற்­றை­களின் அல்­லது மரங்­களின் வயது மற்றும் ஏனைய விவ­சாய உள்­ளீடு மற்றும் நட­வ­டிக்­கை­களைப் பொறுத்து தோட்­டத்­திற்கு தோட்டம் அல்­லது மலைக்கு மலை நிலைமை  வேறு­ப­டலாம். நிலை­மை­களை கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய தொழிற்­று­றையில் இது சாத்­தி­ய­மா­கலாம். ஏறத்­தாழ 2 நூற்­றாண்டு கால­மாக பெருந்­தோட்­டத்தில் பணி­பு­ரியும் வேலை­யாட்கள் தின­சரி ஊதி­யத்தை பெற்­று­வ­ரு­வ­தோடு RPCயின் தவ­றினால்  துண்டு கணக்கு முறையைப் பின்­பற்­றும்­படி நாம் அவர்­களை வற்­பு­றுத்­த­லா­காது.

உண்­மையில்  பெருந்­தோட்­டத்­துறை தேசிய சொத்­தாகும். 70 களில் தேசி­ய­ம­ய­மாக்­கப்­பட்­டதன் பின் அவை­களை முகா­மைத்­துவம் செய்­யவும் மற்றும் வினைத்திறனான அபிவிருத்திக்கும் உட்படுத்த முடியாது எனத் தீர்மானித்து அந்நடைமுறையை மாற்றி அரசு மீண்டும் அவற்றை தனியார் கம்பனிகளுக்கு வழங்கியது. இலாபத்தை ஈட்டும் அதேவேளையில் பெருந்தோட்டத் துறைக்கு புத்துயிர் கொடுத்து சிறந்த நிலையில் பராமரிக்கும் என்ற நம்பிக்கையில் நாட்டு மக்கள் பெருந்தோட்டங்களை RPC இடம் கையளித்தனர். துரதிஷ்டவசமாக தற்போது அவர்கள் பெருந்தோட்டத்துறையை அழிவின் விளிம்புக்கு கொண்டுவந்து விட்டனர்.

இராமையா யோகராஜன் ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.க. மற்றும் ஐ.நா. தொழிற்சங்கவாதியும் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'உள்நாட்டு அரசியல் குற்றம்சாட்டப்பட்டவர்களை பாதுகாத்தாலும் பொறுப்புக்கூறலை...

2025-03-26 13:31:44
news-image

அபிவிருத்திக்கான தடைகளை அகற்றுதல்

2025-03-26 14:11:02
news-image

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

2025-03-26 14:14:36
news-image

ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட டட்லி...

2025-03-24 11:43:54
news-image

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

2025-03-23 17:48:46
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53