மத்திய மாகாணத்தில் கடந்த 5 மாதங்களுக்குள் 1269 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களிலேயே 1269 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் 986 டெங்கு நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 149 டெங்கு நோயாளர்களும் நுவரெலியா மாவட்டத்தில் 124 டெங்கு நோயாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த சுகாதாரப் பிரிவினர் அதிகமாக நகர பிரதேசங்களிலேயே இவ்வாறு டெங்கு நோயாளர்கள் அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் சுகாதார பிரிவினர் வீடு வீடாகச் சென்று மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளையும் அவற்றை தடுப்பதற்கு தடுப்பு புகை திட்டத்தையும் செயல்படுத்தி வருவதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM