மத்திய மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

Published By: MD.Lucias

13 Jun, 2016 | 03:28 PM
image

மத்திய  மாகாணத்தில் கடந்த 5  மாதங்களுக்குள் 1269 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கண்டி, மாத்தளை, நுவரெலியா  ஆகிய மூன்று  மாவட்டங்களிலேயே  1269 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 

கண்டி மாவட்டத்தில் 986 டெங்கு நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 149 டெங்கு நோயாளர்களும்  நுவரெலியா மாவட்டத்தில் 124 டெங்கு நோயாளர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த  சுகாதாரப் பிரிவினர் அதிகமாக நகர பிரதேசங்களிலேயே இவ்வாறு  டெங்கு நோயாளர்கள் அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர்கள்  சுட்டிக்காட்டினர். 

டெங்கு நோயினை  கட்டுப்படுத்தும் வகையில் அந்தந்த  மாவட்டங்களில் சுகாதார பிரிவினர் வீடு வீடாகச் சென்று மக்களை தெளிவுபடுத்தும்  நடவடிக்கைகளையும் அவற்றை தடுப்பதற்கு தடுப்பு புகை திட்டத்தையும் செயல்படுத்தி வருவதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22