தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தமிழ் மக்கள்  பலப்படுத்துவார்கள் -  சி.வி.கே.சிவஞானம்

Published By: Digital Desk 4

05 Feb, 2020 | 05:20 PM
image

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தமிழ் மக்கள் பலப்படுத்துவார்கள் என்ற திடமான நம்பிக்கை உள்ளதாகத் தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் உதிரிகளுக்கு வாக்களித்து வரலாற்றுத் தவறை இழைக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.

தேர்தல் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

அடுத்த பாராளுமன்றத் தேர்தல் என்பது ஒரு சவால் மிக்க தேர்தலாக இருக்கும். ஏனென்றால் எங்களோடு இருந்த எல்லோரும் பிரிந்து நின்று கூறு கூறாக தேர்தல்களில் பங்குபற்றுகின்றார்கள். ஒரு கூட்டமைப்பு அல்லது கூட்டு ஏற்படுத்தப்படும் அல்லது ஏற்படுத்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது என்பது நடக்கிறது.

ஆகவே தேர்தல் சவாலாக இருக்குமென்பது உண்மை ஆனால் இறுதியாக தேர்தல்களில் பல அணிகள் உதிரிகளாகப் போட்டியிட்டாலும் அவற்றையெல்லாம் நிராகரித்து மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தெரிவு செய்வார்கள். ஒட்டுமொத்தமாக கூட்டமைப்பை தெரிவு செய்ய வேண்டிய தேவையும் இருக்கிறது. ஏனென்றால் சில்லறையாக உதிரிகளாக பாராளுமன்றத்திற்குச் சென்று சாதிக்க முடியாது. ஒரு பலமாக நிற்க வேண்டும்.

நான் ஏற்கனவே சொன்னது போல ஒரு தலைமையின் கீழ் நிற்க வேண்டும். அந்தத் தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். சுயநலம் கொண்டவர்கள் ஒரு இடத்திற்குப் போனால் நாங்கள் இன்னும் சில வியாழேந்திரன்களை உருவாக்க முடியும்.

ஆகவே அதைத் தவிர்ப்பது என்றால் கூட்டமைப்பை முழுமையான ஒரு தலைமைத்துவம் கொண்ட அமைப்பாக கட்சியாக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அது பலகால வரலாற்றில் அதுவே நடந்திருக்கிறது. அதையே மக்கள் செய்வார்கள் என்று நம்புகின்றேன்.

ஆகவே தேர்தல் நாள் வரைக்கும் பெரிய சவாலாக இருக்கின்ற விடயம். தேர்தலன்று மாறி மக்கள் கூட்டமைப்பை நிச்சயமாக ஆதரிப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்குண்டு.

மேலும் ஈ.பி.டி.பியை தவிர ஏனைய அனைவரும் எங்களிடம் இருந்து போனவர்கள் தான். ஆனபடியால் கூட்டமைப்பிற்கு கிடைத்த வாக்குகளை அவர்கள் பிரிந்திருந்தால் உடைத்துக் கொள்வார்கள் என்பது உண்மை. ஆனால் அது எந்தவகையிலும் ஒரு தாக்கத்தை எங்களுக்கு எற்படுத்தக் கூடிய கூட்டணியாக அல்லது எதரணியாக அது அமையாது.

இப்பொழுது அவ்வாறான எதிரணிகள் என்றெல்லாம் பேச்சுக்கள் இடம்பெறுவது இயல்பு. ஆனால் தேர்தல் நாள் முடிவில் மக்கள் எங்கள் பக்கம் தான் நிற்பார்கள். எல்லாக் காலத்திலும் வரலாறு அப்படித் தான் சொல்லியிருக்கிறது.

குறிப்பாக 2004 தேர்தலில் எந்தளவிற்கு வெற்றி பெற்றோம் எத்தனை இலட்சமாக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்கள் எல்லாம் அதன் பின் வெளியேறி என்னத்தைப் பெற்றார்கள் மக்கள் என்ன தீர்ப்பு வழங்கினார்கள என்று பார்க்க வேண்டும். அந்த மாதிரியான ஒரு நிலை இந்தத் தேர்தலிலும் ஏற்படும்.

இதே வேளை கூட்டமைப்பில் இருந்து போனவர்கள் திரும்பி வரலாம் அதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று நான் கூட சொல்லியிருந்தேன். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அவ்வாறாக வருவதற்கான சூழல் ஏற்படுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆகவே உதிரிகளாக போட்டி போடுகின்ற நிலைமை தான் ஏற்படுமென்று நான் நம்புகின்றேன்.

அவ்வாறு உதிரிகளாக போட்டியிட்டால் மக்கள் தங்களது தீர்ப்பை மிகத் தெளிவாக பலமாக இருந்து பேசக் கூடிய செயற்படக் கூடிய ஒரு கட்டமைப்பாக கூட்டமைப்பு தொடர்ந்த இருக்கின்ற காரணத்தினால் இன்னுமொரு பரீட்சார்த்தங்களுக்குப் போகாமல் இன்னொருவரை நம்பி ஏமாறுகிற நிலைக்கு போகாமல் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டுமென்பது தான் என்னுடைய நிலைப்பாடு.

மக்கள் நலன் சார்ந்து தேசிய நலன் சார்ந்து தமிழ் தேசிய இனம் சார்ந்து கூட்டமைப்பு என்ற கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். அதற்கான ஆதரவை மக்கள் தர வேண்டும். ஆகவே விருப்பிமில்லாதலரவ்கள் யாராவது இருந்தால் அவர்களைத் தவிர்த்து ஏனையவர்களைத் தெரியு செய்யுங்கள் .

எதற்காகவும் கட்சியைக் கைவிடாமல் கட்சிக்கு வாக்களியுங்கள். கட்சியை ஆதரிக்க வேண்டிய தேவை மக்களுக்கு இருக்கிறது. அதனை மக்கள் நிச்சயமாக செய்வார்கள் என்பது என்னுடைய வரலாற்று அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். அவ்வாறே செய்வார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58