புத்தளத்தில் ட்ரொன் கெமராக்களை பயன்படுத்தி காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை  

Published By: Digital Desk 4

05 Feb, 2020 | 05:04 PM
image

புத்தளம் மாவட்ட செயலகத்திற்குற்பட்ட நவகத்தேகம பிரதேசத்தில் அப்பகுதி மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை இன்று முதல் (5) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்கள பொது முகாமையாளரின் பணிப்புரையின் கீழ் புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய உதவி முகாமையாளரின் தலைமையில் புத்தளம் மாவட்ட செயலகத்திற்குற்பட்ட நவகத்தேகம பிரதேசத்தில் அப்பகுதி மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை இன்று முதல் (5) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 15 நாட்களுக்கு குறித்த செயற்பாடு  முன்னெடுக்கப்பட உள்ளது. இதன்போது நவகத்தேகம விகாரையில் முகாம் அமைக்கப்பட்டு 15 நாட்களுக்கு தங்கியிருந்து குறித்த செயற்பாடுகள் முன்னெடுக்க உள்ளனர்.

புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகள், புத்தளம் வனஜீவராசிகள் கட்டுப்பாட்ட்ப் பிரிவினர், கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்களத்தினர் இனைந்து செயட்பாட்டை முன்னெடுத்துள்ளனர். இதன்போது 'ட்ரொன்' கெமராக்களை இயக்குவதற்கு பாலாவி விமானப்படையினரும் இணைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் திணைக்கள உதவி முகாமையாளர் தெரிவித்தார். 

நவகத்தேகம காட்டுப்பகுதியில் காணப்படும் காட்டு யானைகளையே தப்போவ காட்டுப் பகுதிக்கு விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47