சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பூரண நலத்துடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என வைத்தியர்கள் உறுதியளித்துள்ளனர்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியது. இது சீனா மட்டுமின்றி மற்ற சில நாடுகளிலும் உயிர்களை பலிவாங்கியதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக இதுவரை 492 பேர் உயிரிழந்துள்ளதுடன், 24,552 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுள் 3,223 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதுடன், 907 பேர் குணமடைந்தும் உள்ளனர்.
இந்நிலையில் சீனாவின் ஷூலாங்ஜீயங் மாகாணத்தின் ஹர்பின் நகரில் உள்ள ஒரு வைத்தியசாலையில் ஒரு நிறைமாத கர்ப்பிணி, கொரோனா வைரஸ் தாக்கியிருக்கலாம் என்ற அடிப்படையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து , வைத்தியர்களின் சிகிச்சையில், அந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் பாதித்தது உறுதி செய்யப்பட்டது. கர்ப்பிணி என்பதால், குழந்தைக்கு நோய் பரவாமல் இருக்க, அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க முடிவு செய்யப்பட்டது. பின் சிகிச்சையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என வைத்தியர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பரிசோதனை செய்தனர்.
ஆனால் அதிஷ்டவசமாக அந்த குழந்தைக்கு கொரோனா தாக்குதல் இல்லை எனவும் கொரோனாவை வென்று இந்த குழந்தை பிறந்ததாகவும் வைத்தியர்கள் கூறினர். தற்போது தாயும், சேயும் பூரண நலத்துடன் உள்ளதாகவும் , தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பில் கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM