தனது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரினது வங்கிக் கணக்குகளிலிருந்து வங்கி அட்டையினைப் பயன்படுத்தி 5 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடியாகப் பெற்றுள்ளதுடன், தாயிடமிருந்த சுமார் 5 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய தங்கச் சங்கிலியையும் கொள்ளையிட்டு அடகு வைத்துவிட்டு தாயையும், தந்தையையும் வீட்டை விட்டு வெளியேற்றிய மகளையும் மருமகனையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் மைக்குளம் பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட தாயும் தந்தையும் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய அவர்கள் மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், சில வருடங்களுக்கு முன்னர் தமது மகளை சிலாபம் மைக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு திருமணம் முடித்து கொடுத்து அவர்கள் சிலாபத்திலேயே வசித்து வந்துள்ளதோடு திருமணத்தின் பின்னர் சிலாபம் பிரதேசத்திற்கே வந்து தம்மோடு இருக்குமாறும், காணி ஒன்றை வாங்கி வீடொன்றை நிர்மாணித்துக் கொள்ள முடியும் என்றும் மகளும், மருமகனும் தம்மை அழைத்ததால் தாமும் அதற்கு விருப்பம் தெரிவித்ததாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மொனராகலை பிரதேசத்தில் தமது வீட்டை 35 இலட்சம் ரூபாவுக்கு விற்றுவிட்டு சிலாபத்திற்கு தமது மகள் மருமகனுடன் வாழ வந்துள்ளதோடு, வீடு விற்ற பணத்தை சிலாபம் நகரிலுள்ள அரச மற்றும் தனியார் வங்கிகள் மூன்றில் வைப்புச் செய்துள்ளனர். பின்னர் சிலாபம் நகரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராகவும் தந்தை பணியில் இணைந்துள்ளார்.
இவ்வாறான நிலையில் சில நாட்களுக்குப் பின்னர் மருமகன் தனது மனைவியிடம் தெரிவித்த யோசனைக்கு அமைய மகள் தனது தாயினது வங்கி அட்டைகள் மற்றும் அவற்றின் இரகசிய இலக்கங்களையும் பெற்றுக்கொண்டு அவற்றைப் பயன்படுத்தி அவ்வப்போது ஐந்து இலட்சம் ரூபாய் பணத்தை மோசடியாகப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலாக தாயிடமிருந்து சுமார் ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்க சங்கிலியையும் எடுத்துச் சென்ற மகள் அதனை தனது கணவரிடம் கொடுத்து அடகு வைத்துள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவை ஒன்றிற்காக தாய் மகளிடம் தனது தங்க சங்கிலியைக் கேட்டபோது அதனை அவசரத் தேவைக்காக அடகு வைத்துள்ளதாக மகள் கூறியதை அடுத்து தனது மகள் மற்றும் மருமகன் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் தாயும் தந்தையும் தமது வங்கிக் கணக்கைப் பரீட்சித்துப் பார்த்துள்ளதோடு அவற்றிலிருந்து பணம் மீளப்பெறப்பட்டிருப்பதை அறிந்து கொண்டுள்ளனர்.
பின்னர் இது பற்றி கேட்டபோது அவர்களுக்கிடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதுடன் மகளும், மருமகனும் சேர்ந்து தாய்க்கும் தந்தைக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்து அவர்களை வீட்டை விட்டு வெளியேறுமாறும் அச்சுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரும் சிலாபம் பொலிஸ் நிலையம் சென்று பொலிஸாரின் தயவை நாடியுள்ளனர். இந்த முறைப்பாட்டையடுத்து உடன் செயற்பட்ட பொலிஸார் மகளையும், மருமகனையும் கைது செய்துள்ளதோடு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
சிலாபம் பொலிஸ் நிலைய பொறுப் பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் செனரத் எதிரிசிங்க தலைமை யிலான குழுவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM