தேசிய வர்த்தக கொள்கையொன்றுக்கான முன்மொழிவு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை கொழும்பு - 07 தொழில் வல்லுனர் சங்க மத்திய நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்தின் போது இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
சர்வதேச வர்த்தகத்திற்காக தேசிய வர்த்தக கொள்கையொன்றை வகுக்க வேண்டிய தேவை குறித்து நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. அதற்காக தொழில் வல்லுனர்களின் தேசிய முன்னணியினால் மக்கள் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இவ் ஆணைக்குழுவிற்கு பல்வேறு தரப்பினரும் வழங்கிய கருத்துக்களின் சாராம்சம் இந்த முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
தொழில் வல்லுனர்களின் தேசிய முன்னணியின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.
சட்ட ரீதியாக சுதந்திரமடைந்து 72 வருடங்களுக்குப் பின்னர் கொள்கை வகுப்பின் மூலம் ' உண்மையான சுதந்திரத்தை நோக்கி ' என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற கண்காட்சியையும் ஜனாதிபதி இதன் போது பார்வையிட்டார்.
இவ்வாறானதொரு கொள்கையொன்று இதுவரைக் காலமும் நடைமுறைப்படுத்தப்படாததன் காரணமாக அரசாங்கம் மாற்றமடைகின்ற போது கொள்கைகளும் பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு வருகின்றன.இது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் முன்னேற்றத்திற்கும் நல்லதல்ல என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM