பொதுத் தேர்தலிலும் ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ' என்ற கூட்டணியிலேயே போட்டியிடவுள்ளோம் : தயாசிறி

Published By: R. Kalaichelvan

04 Feb, 2020 | 03:21 PM
image

(எம்.மனோசித்ரா)

இணை தலைமைத்துவ விடயம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - பொதுஜன பெரமுனவுக்கிடையிலான ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட முக்கிய அம்சமாகும்.

அவ்வாறிருக்கையில் மறுத்து செயற்படுவதையோ , ஊடகங்களுக்கு ஒப்பந்தங்களை மீறிய வகையில் கருத்துக்களை வெளியிடுவதோ ஏற்புடையதல்ல என அதிருப்தியை வெளியிட்டுள்ள சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, கூட்டணி கட்சிகளின் கட்சி தலைவர்களுடனான சந்திப்பில் இந்த விடயம் குறித்து கூடிய கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். 

பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ' ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , பொதுஜன பெரமுன மற்றும் ஏனைய பங்காளி கட்சிகள் இணைந்த கூட்டணியில் இணை தலைமைத்துவம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏக தலைமைத்துவத்தில் மாத்திரமே புதிய கூட்டணி செயற்படும் : என்றும் கூறியுள்ளமை குறித்து வினவிய போதே தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், 

ஜனாதிபதித் தேர்தலைப் போன்று பொதுத் தேர்தலிலும் ' ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன ' என்ற கூட்டணியிலேயே போட்டியிடவுள்ளோம்.

இந்த கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இணை தலைமைத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற அம்சம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராகவும் உள்ளார். எனவே புதிய கூட்டணி அமைக்கப்பட்டதன் பின்னர் அவருக்கும் முக்கிய பதவி வழங்கப்பட வேண்டும். இதனை ஜனாதிபதித் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவும் ஏற்றுக் கொண்டது. 

ஆனால் தற்போது அதனை மறுக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் பேசப்பட்டவற்றை ஊடகவியலாளர் சந்திப்புக்களில் கூறுவது பொறுத்தமானதாக இருக்காது.

இவ்விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்று எடுக்கப்பட வேண்டும் என்று அடுத்த கட்சி தலைவர் கூட்டத்தில் வலியுறுத்துவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11