கணவனால் விபச்சாரத்திற்குள் தள்ளப்பட்ட மனைவி: பள்ளிப்பருவத்திலேயே தாத்தாவால் சீரழிக்கப்பட்ட கொடூரம்..!

Published By: J.G.Stephan

04 Feb, 2020 | 01:30 PM
image

கண­வனால் விப­சா­ரத்­திற்கு விடப்­பட்ட பெண், பள்ளிப் பரா­யத்தில் தனது தாத்­தா­வினால் பாலியல் வல்­லு­ற­விற்­குற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக, பொலி­சா­ருக்கு வழங்­கிய முறைப்­பாட்­டை­ய­டுத்து அப்­பெண்ணின் தாத்­தாவை, மொன­ரா­கலைப் பொலிசார் நேற்று கைது செய்­துள்­ளனர். 

தனது கண­வனால் விப­சா­ரி­யாக்­கப்­பட்ட 19 வயதுப் பெண்,  மொன­ரா­கலைப் பொலி­சா­ருக்கு அளித்த முறைப்­பாட்­டி­லேயே இந்த விடயம் தெரி­ய­வந்­துள்­ளது. அம்­மு­றைப்­பாட்டில் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக காத­லித்து திரு­மணம் செய்த தனது கணவன் சில மாதங்கள் மட்­டுமே, தன்­னுடன் சந்­தோ­ஷ­மாக இருந்­த­தா­கவும், பின்னர் தனது கண­வனால் அவ­ரது நண்­பர்­க­ளுக்கும், பிற நபர்­க­ளுக்கும் தன்னை விற்­பனை செய்து, பணம் சம்­பா­தித்து வரு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார். 

மேலும் தன்னை துப்­பாக்­கி­யினால் சுட்டு கொலை செய்வேன் என்று அச்­சு­றுத்­து­வதால் செய்­வ­த­றி­யாத நிலையில் கண­வனால் குறிப்­பி­டப்­படும் நபர்­களின் இச்­சைக்கு ஆளாக்­கப்­பட்டு வரு­வ­தாக தெரி­வித்­துள்ளார். இதன்­போதே தனது தாத்தா பற்­றிய கதையை வௌியாக்­கி­யுள்ளார். அதா­வது,

 பள்­ளிப்­ப­ரா­யத்தில்  பெற்றோர் தன்னை  தாத்தா, பாட்­டியின் பொறுப்பில் விட்டு, சென்று விட்­டனர். தான் தனி­மையில் இருக்கும் போதெல்லாம், தாத்தா தன்னை பாலியல் வல்­லு­ற­விற்­குற்­ப­டுத்தி வந்­துள்ளார். இதனால் தாத்­தா­வுக்கு பயந்து, காட்டில் மறைந்­தி­ருக்க வேண்­டிய நிலையும் அடிக்­கடி தனக்கு ஏற்­பட்­ட­தாக பொலி­சா­ரிடம் தெரி­வித்­துள்ளார். 

இத­னை­ய­டுத்து பொலிசார் பெண்ணின் கண­வனை துப்­பாக்­கி­யுடன் கைது செய்­த­துடன், பெண்ணின் 77 வயது நிரம்­பிய தாத்­தா­வையும் கைது செய்­த­துள்­ளனர். இவர்கள் விசா­ர­ணையின் பின்னர் மொன­ரா­கலை மஜிஸ்ரேட் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­ப­டு­வ­ரென்று, மொன­ரா­கலை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி சேகித்த தேசப்­பி­ரிய தெரி­வித்தார். 

பொலிசார் மேற்­கொண்ட தீவிர புலன் விசா­ர­ணை­களில், விப­சா­ரத்­திற்கு செல்­லு­மாறு கண­வனின் வற்­பு­றுத்­தலை சகிக்­க­மாட்­டா­மை­யி­லேயே, இப்பெண் பொலிஸ் நிலையம் வந்து முறை­யிட்­டுள்­ள­மையும், இப்­பெண்ணின் கணவன் காப்­பு­றுதி நிறு­வ­ன­மொன்றில் முக­வ­ராக இருந்து வரு­கின்­ற­மையும், இவர் தனது மனை­வியை பதி­னை­யா­யிரம் ரூபா முதல் இரு­பத்­தை­யா­யிரம் ரூபா வரையில் தனது நண்­பர்­க­ளுக்கும், பிற­ருக்கும் விற்­பனை செய்து வந்துள்ளமையும், இதற்கான ஆதாரங்களும் பொலிசாருக்கு கிடைத்துள்ளதும் தெரிய வந்துள்ளதுது.

இப்பெண்ணின் மருத்துவ சிகிச்சை அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அப்பெண்ணை பொலிசார் மொனராகலை அரசினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18