உள்­ளக விசா­ர­ணை­யின்­போது சர்­வ­தேச நிபு­ணர்­க­ளுக்கு இட­மில்­லை.!

Published By: Robert

13 Jun, 2016 | 09:21 AM
image

யுத்தக் குற்றம் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக விசா­ர­ணையின் போது எக்­கா­ரணம் கொண்டும் சர்­வ­தேச நிபு­ணர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. வெளி­நா­டு­க­ளி­ட­மி­ருந்து எமக்கு தொழில்­நுட்ப உத­விகள் மாத்­தி­ரமே அவ­சி­ய­மாகும். இதனை தவிர எமது உள்­வி­வ­காரம் சார்ந்த பிரச்­சி­னை­களை எம்மால் தீர்த்­துக்­கொள்ள முடியும். மேலும் இந்த விட­யத்தின் போது சர்­வ­தே­சத்தின் நிபந்­த­னை­க­ளுக்கு அடி­ப­ணிய போவ­தில்லை என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்துள்­ளார்.

தற்­போது எம்­முடன் முரண்­பட்ட சர்­வ­தேச நாடு­க­ளுடன் சகோ­த­ரத்­து­வத்தை கட்­டி­யெ­ழுப்­பி­யுள்ளோம். அத்­துடன் போர்­குற்றம் இழைத்­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்­டுகள் தற்­போது படிப்­ப­டி­யாக மறைந்து வரு­கின்­றது. மேலும் எமக்கு விதித்த தடை­களும் நீக்­கப்­பட்­டுள்­ள­தாகவும் அவர் குறிப்­பிட்டார்.

நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளுக்கு குந்­தகம் விளை­விக்கும் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டும் வடக்கு மற்றும் தெற்­கி­லுள்ள இன­வா­தி­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு பின்­நிற்க மாட்டேன் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

ஆங்­கில நாளிதழ் ஒன்­றிற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வழங்­கிய செவ்­வி­யொன்றின் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் மேலும் குறிப்­பி­டு­கை­யில்,

நாம் ஆட்­சிப்­பீடம் ஏறு­வ­தற்கு முன்னர் இலங்­கையில் ஜன­நா­யகம் முழு­மை­யாக குழித்­தோண்டி புதைக்­கப்­பட்­டி­ருந்­தது. . மனித உரிமை மீறல்­க­ளுக்கு எல்லை இருக்­க­வில்லை. நீதி­மன்ற கட்­ட­மைப்பு ஊழ­லினால் மூழ்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­தது. மேலும் கடன் சுமை­யினால் நாட்டின் பொரு­ளா­தாரம் அதள பாதா­ளத்­திற்கு தள்­ளப்­பட்­டி­ருந்­தது. நல்­லி­ணக்­கத்­திற்கு பாதிப்­புகள் ஏற்­படும் வகையில் நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்ட வண்­ண­மி­ருந்­தது. தமிழ், முஸ்லிம், சிங்­கள மூவின மக்­களும் ஒரு­வரை ஒருவர் சந்­தேக கண்கொண்டு பார்த்து அச்சம் கொள்ள வேண்­டிய நிலைமை காணப்­பட்­டது. இதனால் விடு­தலை புலிகள் இயக்கம் மீண்­டெழும் பயமும் மக்­க­ளி­டையே நில­வி­யது. இதன் கார­ண­மா­க சர்­வ­தேச உற­வுகள் எம்மை விட்டு விரைந்­தோட தொடங்­கி­யது. இதன்­பி­ர­காரம் சர்­வ­தேச நாணய நிதியம் போன்ற அமைப்­பு­களும் இலங்­கையை ஒதுக்கி வைத்து செய­ற்பட்­டன.

இருந்­த­போ­திலும் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சி வந்­ததன் பின்னர் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் மூல­மாக மனித உரி­மைகள், ஜன­நா­யகம், நீதித்­துறை கட்­ட­மைப்புக்களுக்­கு வலு­சேர்க்­கப்­பட்­டது. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் பாரா­ளு­மன்­றத்­திற்கு வழங்­கப்­பட்­டது. சர்­வ­தேசத்திற்கு இதன்­மூலம் எம்­மீ­தான நம்­பிக்­கையை வலுப்­பெற செய்தோம். தற்­போது எம்­முடன் முரண்­பட்ட சர்­வ­தேச நாடு­க­ளுடன் சகோ­த­ரத்­து­வத்தை கட்­டி­யெ­ழுப்­பி­யுள்ளோம். அத்­துடன் போர்­குற்றம் இழைத்­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்­டுகள் தற்­போது படிப்­ப­டி­யாக மறைந்து வரு­கின்­றது. மேலும் சர்­வ­தே­சத்­தினால் எமக்கு விதித்த தடை­களும் நீக்­கப்­பட்­டுள்­ளது. .

தற்­போது இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இதன்­போது வடக்­கிலும் சரி தெற்­கிலும் சரி நல்­லி­ணக்­கத்­திற்கு குந்­தகம் விளை­விக்கும் வகையில் செயற்­படும் இன­வா­தி­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு நாம் பின்­நிற்க மாட்டோம்.இதன்­பி­ர­காரம் சர்­வ­சே­த­தத்­திற்கு நாம் வழங்­கிய வாக்­கு­று­தி­களின் பிர­காரம் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை ஆரம்­பிக்க திட்­ட­மிட்­டுள்ளோம். இதற்­காக வெளிநா­டு­க­ளி­ட­மி­ருந்து தொழில்­நுட்ப உத­விகள் பெற்­றுக்­கொள்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம்.

ஆனாலும் யுத்த குற்றம் தொடர்­பி­லான உள்­ளக விசா­ர­ணையின் போது எக்­கா­ரணம் கொண்டும் சர்­வ­தேச நீதி­ப­திகள் உள்­வாங்­கப்­ப­ட­மாட்­டார்கள். சர்­வ­தேச நிபு­ணர்­களின் உத­விகள் இல்­லாமல் உள்­நாட்டு பிரச்­சி­னை­களை எம்மால் தீர்த்­துக்­கொள்ள முடியும். இந்­நி­லையில் தொழில்­நுட்ப உத­வி­களை சர்­வ­தே­சத்­தி­ட­மி­ருந்து பெறும் போது நிபந்­த­னை­க­ளுக்கு அடிப்­ப­ணிந்து செயற்­ப­ட­மாட்டோம் .

இதே­வேளை கடந்த ஆட்­சியின் போது இடம்­பெற்ற பாரி­ய­ள­வி­லான நிதி மோச­டிகள் குறித்து விசா­ரணை செய்­வ­தற்­காக விசேட நிதி குற்ற புல­னாய்வு பிரிவு மற்றும் ஊழல் மோச­டிகள் விசா­ரணை ஆணைக்­குழு நட­வ­டிக்­கை­க­ளுக்கும் சர்­வ­தேசம் தொழில்­நுட்ப உத­வி­களை வழங்­கு­வ­தற்கு முன்­வந்­துள்­ளது.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் பொறுப்பை ஏற்ற போதிலும் ஆரம்­பத்தில் கட்சி அங்­கத்­த­வர்­களின் உதவி எனக்கு கிடைக்­க­பெ­ற­வில்லை. ஆனாலும் காலியில் நடந்த மே தின கூட்­டத்தின் போது எனது அழைப்­பினை ஏற்று இலட்­சக்­க­ணக்­கான மக்கள் வருகை தந்­தனர். இதன்­படி அடுத்து வரும் தேர்­தலில் தோல்வி அடையா வண்ணம் கட்சியை பூரண மறு­சீ­ர­மைப்­புக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தோல்வி அடைந்தவர்களை தேசியப்பட்டியலில் உள்ளடக்கியதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் எனக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை கொண்டு செல்வதற்கு அனுபவம் வாய்ந்தவர்கள் தேவைப்பட்டனர். இவ்வாறு அனுபவம் வாய்ந்தவர்கள் அனைவரும் திட்டமிடப்பட்ட வகையில் வேணும் என்றே தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர். . இதன்காரணமாகவே அவர்களை தேசியப்பட்டியலின் ஊடாக வரவழைத்தேன். அத்துடன் சீனாவுடன் எதிர்காலத்தில் பலமான உறவு கட்டியெழுப்பப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07