மட்டு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பின்லாந்து அரசு சகலவழிகளிலும் உதவும் - இலங்கைக்கான  பின்லாந்து தூதுவர் 

Published By: Digital Desk 4

02 Feb, 2020 | 03:14 PM
image

மட்டக்களப்பு மாவட்டம் எல்லாவகையான வளமும் உள்ள  மாவட்டத்தினை மேலும் பெறுமதிசேர்க்க அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு பின்லாந்து அரசாங்கம் சகலவழிகளிலும் உதவுவதற்கு ஆயத்தமாக உள்ளதாக இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன் தெரிவித்தார்.

கடல் தொழில் நீரியல் வழங்கல் அமைச்சினால் இலங்கைக்கான பின்லாந்து தூதுவராலயத்தற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு; வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தினை அபிவிருத்திசெய்யும் நோக்கில் இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன் மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்டசெயலகத்தில் சந்தித்து மாவட்டம் தொடர்பான அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல்  இவ்வாறு அவர் தெரிவித்தார் 

இலங்கைக்கான பின்லாந்து தூதுவரின் மட்டக்களப்பு விஜயத்தில் தான் முதலாவதாக இம் மாவட்டத்தில் பல்லினசமூகங்களும் ஒன்றிணைந்து வாழுகின்ற  மாவட்டத்தினை நான் பார்க்கிறேன்.  

அத்தோடு மாவட்டத்தில் இருக்கின்ற மீன் வளத்தினை நவீனமுறையில் அபிவிருத்தியினை மேற்கொண்டு பெறுமதிவாய்ந்த சந்தையினை உருவாக்க மீனவர்களுக்கான முளுமையான பயன்பாட்டினையும் பெற்றுக் கொடுப்பதற்கு தனது அரசு முழுமையான ஒத்துழைப்பினையும் அரசாங்கத்திற்கு ஊடாகசெய்து கொடுக்கப்படும்..

மட்டக்களப்பு மாவட்டமானது கிழக்கு பகுதியை எடுத்துக் கொண்டால் அழகான நீலநிறமாக காட்சியளிக்கின்ற கடல் மிகுந்த பிரதேசமாகவும் மேற்குப் பகுதியைப் பார்த்தால் அழகிய பசுமைநிறைந்த வயல் வெளிகளை காணக் கூடியதாக இருக்கின்றதுடன் சகலவிதமான பழ வகைகளும் இம் மாவட்டதில் கிடைக்கின்றது. 

எல்லா வகையான வளமும் உள்ள இம் மாவட்டத்தினைமேலும் பெறுமதிசேர்க்க அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு பின்லாந்து அரசாங்கம் சகலவழிகளிலும் உதவுவதற்கு ஆயத்தமாக உள்ளதாக  அவர் தரிவித்தார்.

இவ்  கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதிபத்மராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் பகுதி தலைமை உத்தியோகத்தர் ஜஸிம் பாகிர்.; மாவட்டமீன் பிடித் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்;.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30