மத்­ர­ஸாக்­களை பதிவு செய்வதற்கு இராணுவ அதி­கா­ரி ­: முஸ்லிம் மக்­களை அச்­சு­றுத்தும் செயல் என்கிறார் முஜிபுர் 

Published By: R. Kalaichelvan

31 Jan, 2020 | 04:31 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

மத்­ர­ஸாக்­களை பதிவு செய்யும் நட­வ­டிக்­கைக்குப் பொறுப்­பாக இராணுவ அதி­கா­ரி­யொ­ருவர் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்பது முஸ்லிம் மக்களை அச்­சு­றுத்தும் செயற்­பா­டாகும்.

மத்­ரஸா பதிவு நட­வ­டிக்­கைகள் முஸ்லிம் சமய கலா­சார திணைக்­க­ளத்தின் ஊடாகவே மேற்கொள்ளவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நாட்டில உள்ள குர்ஆன் மத்ரஸாக்கனை பதிவுசெய்யும் நடவடிக்கைக்கு பொறுப்பாக ராணுவ அதிகாரி ஒருவரை நியமித்திருப்பது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குர்ஆன் மத்­ர­ஸாக்கள், அரபுக் கல்­லூ­ரி­களை மீளப் பதிவு செய்து முழு­மை­யான மறு­சீ­ர­மைப்­பொன்றை மேற்­கொள்­வ­த­ற்கு அர­சாங்­கத்­தினால் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக நாம் அறி­கிறோம். இருந்தபோதும் நாட்­டி­லுள்ள அனைத்து மத்­ர­ஸாக்­களும் அரபுக் கல்­லூ­ரி­களும் கலா­சார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.

கடந்த 2015 க்கு முன்னர் மத்­ர­ஸாக்கள் பதிவு செய்தல் மற்றும் அரபுக் கலா­சா­லை­களை பதிவு செய்யும் நட­வ­டிக்­கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­த­ன. எனினும், நல்­லாட்சி அர­சாங்­கத்தில் முன்னாள் அமைச்சர் அப்துல் ஹலீமின் முயற்­சி­யினால் பெரும்­பா­லான மத்­ர­ஸாக்­கள் பதி­வுசெய்யப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில்  இன்னும் பதி­வு­செய்­யப்­ப­டாத மத்­ர­ஸாக்கள் இருப்பின் அவற்றை பதி­வு­செய்து கொள்­வ­தற்­கான கால அவ­கா­சத்தை அர­சாங்­கத்தால் வழங்க முடியும்.

இதனை தவிர்த்து அனைத்து மத்­ர­ஸாக்கள் மற்றும் அரபுக் கல்­லூ­ரி­க­ளையும் மீண்டும் பதிவு செய்ய நட­வ­டிக்கை எடுத்­தி­ருப்­பது  கால விர­யத்­தை வீணாக்குவதுடன் அர­சுக்கு மேலும் செல­வீ­னத்­தையும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்கின்றது. அதனால் கடந்­த­காலப் பதி­வு­களை பேணு­வதே சிறப்­பா­ன­தாக அமையும்.

அத்துடன் மத்­ர­ஸாக்­களை பதிவு செய்யும் நட­வ­டிக்­கைக்குப் பொறுப்­பாக இரா­ணுவ அதி­கா­ரி­யொ­ருவர் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இது முஸ்விம் மக்­களை அச்­சு­றுத்தும் செயற்­பா­டாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50