மனிதன் உயிர் வாழ அத்தியாவசியமானது கழிவேற்றம். சிறுநீர் உருவாகவும் மற்றும் வெளியேறவும் காரணமாக இருக்கும் இரண்டு சிறுநீரகங்கள், யூரட்டர் எனப்படும் குழாய்கள், ப்ளாடர், இவற்றை கட்டுப்படுத்தும் தசைகள், நரம்புகள் ஆகியவை சேர்ந்தது தான் சிறுநீரக மண்டலம். இவை, நுரையீரல், சருமம், குடல் ஆகியவற்றுடன் சேர்ந்து உடலில் உள்ள நீர் மற்றும் தாதுப்பொருட்களை சமன் செய்கிறது. அதேபோல் ஒவ்வொருவருக்கும் அவர்கள் பருகும் தண்ணீரின் அளவைப் பொறுத்தும், வியர்வை மற்றும் மூச்சுக் காற்றில் வெளியேற்றும் நீரைப் பொறுத்தும் சிறுநீரை வெளியேற்றுகிறது. இந்நிலையில் சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீரக மண்டலத்தில் நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்ற எச்சரிக்கையுடன் இயல்பாக எம்முடன் பேசத் தொடங்கி, சிறுநீரகம் தொடர்பான சில தகவல்களை விளக்கத்துடன் பகிர்ந்துகொள்கிறார் டொக்டர் சதீஷ்.
இந்த துறையைப் பொறுத்தவரையில் பொதுவாக நாம் காணும் பிரச்சினைகளின் முதன்மையானது சிறுநீரகக் கற்கள். இதற்கு எம்முடைய மாறிவிட்ட உணவு வகைகளும், மாற்றியமைத்துக் கொண்ட உணவுப் பழக்கமே இதற்கு காரணம். மாவுச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளை - குறிப்பாக, மைதா, பீட்ஸா, வாழைப்பழம் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுவதாலேயே சிறுநீரகக் கற்கள் தோன்றுகின்றன என்று ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன
மேலும், மேல் முதுகிலிருந்து ஆண் குறிவரை மென்மையான அல்லது கடுமையான வலி சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் வரை பரவி, சட்டென்று குறைந்துவிட்டால் அது சிறுநீரகக் கற்கள் எம்முடைய உடலில் இருப்பதற்கான அறிகுறி என்பதை தெரிந்துகொள்ளலாம். அதேபோல் வலி தோன்றியதும் நாமே அருகிலுள்ள மருந்துகடைகளுக்கு சென்று ஏதேனும் வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடுகிறோம். ஆனால் இது தவறு என்பதை யாரும் உணர்ந்துகொள்வதில்லை.
அத்துடன் இந்த வலி விட்டு விட்டு வரும் என்பதால், சாப்பிடும் வலி நிவா ரணி மருந்துகளும், மாத்திரைகளும் உரிய பலனைத்தருவதில்லை. இதனால் மக்கள் ஏமாறுவதுடன் மேலும் நிலைமையை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.
ஒரு சிலருக்கு வலியுடன் குமட்டல், வாந்தி, நீர்க்கடுப்பு, சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியேறல், பசியின்மை, குளிர் காய்ச்சல் என்பன போன்ற அறிகுறிகளும் தோன்றும். இத்தகைய அறிகுறிகள் தோன்றினால், சற்றும் தாமதியாமல் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்வதே சிறந்தது.
இவ்வாறான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்துகொள்வதன் மூலம் எத்தகைய சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஒரு சிலருக்கு மட்டும் சிடி ஸ்கேன் பரிசோதனையும் தேவைப்படலாம்.
சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது உறுதி செய்து, கண்டறியப்பட்டால், சற்றும் தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
ஏனென்றால், சுமார் 8 மில்லி மீற்றர் முதலான கற்கள், மூன்று வாரத்துக்கு மேல் உடம்புக்குள் இருந்தால் அவை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே கற்கள் கண்டறியப்பட்டதுமே எண்டாஸ்கோப்பி எனும் எளிமையான நுண்துளை சத்திர சிகிச்சை மூலம் கற்களை அகற்றிவிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிறுநீர்ப்பை முதல் சிறுநீர் தாரை வரை எங்கு இந்தக் கற்கள் இருந்தாலும் எண்டாஸ்கோப்பி சிகிச்சை மூலம் அகற்றிவிட இயலும்.
அதே போல் ஒரு முறை சிறுநீரக கற்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் மீண்டும் அவை வருமா? வராதா? என்பது குறித்து இதுவரை உறுதியான எந்தவொரு தீர்வும் கண்டறியப்படவில்லை.
ஆனால் இவைகள் வராமல் தடுப்பதற்கு ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்கின்றன.அதில் ஒன்றை குறிப்பிட வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் மருத்துவர்களின் பரிந்துரைப்படி தினமும் குறைந்தது மூன்று லீற்றர் தண்ணீரை அருந்த வேண்டும்.
அதேபோல் சாப்பிடும் உணவுகளில் உப்பின் அளவைச் சற்றுக் குறைத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவு பிரியர்களாக இருந்தால் அத்தகைய அசைவ உணவுகளில் கட்டுப்பாட்டை பின்பற்றவேண்டும். இதைப்போன்ற சில எளிய நடைமுறைகளை நாம் பின்பற்றத் தொடங்கினால் சிறுநீரக கற்கள் மீண்டும் எம்மைத்தாக்காமல் இருக்கக்கூடும்.
அதேபோல் வயதான ஆண்களுக்கு மட்டும் பிராஸ்டேட் சுரப்பி தொடர்பான சிக்கல் ஏற்படும். சிறுநீர் கழிப்பது தொடர்பான பிரச்சினைகள் என பலரும் இந்த சிக்கலை அலட்சியம் செய்துவிடுகிறார்கள். இந்த சிக்கலுக்கும் சிறுநீரகத்தில் ஏற்படும் புற்று நோய்க்கும் ஒரேவிதமான அறிகுறிகள்தான்.
வயதான ஆண்கள் சிறுநீர் கழிப்பதில் பிரச்சி னைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரி
சோதனை செய்துகொள்ள வேண்டும். இந் நோயை 80 சதவீதம் சாதாரண மருந்துகளால் குணப்படுத்திவிடலாம். சிறுநீர் கழிக்கவே முடியவில்லை என்ற நிலை தோன்றினால் மட்டும் எண்டாஸ்கோப்பி சிகிச்சையை மேற் கொள்ளலாம்.
சில ஆண்களுக்கு விதைப்பையில் வீக்கம் தோன்றலாம். ஏதோ அடிபட்டதனால் ஏற்பட்ட வீக்கம் என்று நினைத்துவிடாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். ஏனெனில், இது விதைப்பையில் தோன்றும் புற்றுநோயாகவும் இருக்கலாம். நவீன மருத்துவம் இதுபோன்ற புற்றுநோய்களை முழுமையாக குணப்படுத்தும் வல்லமை பெற்றிருக்கிறது. எனவே, தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும். பெண்களைப் பொறுத்தவரையில், சிறுநீரை அடக்குவதால் உண்டாகும் நீர்க்கடுப்பு மற்றும் கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறுதல் ஆகியவையே மிகப் பொதுவான பிரச்சினைகள்.
கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறுவதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றி, கழிவறைக்குப் போவதற்கு முன் சிறுநீர் கழித்துவிடுவது. இதற்கு, சிறுநீர் கழிக்கும் உணர்வு தோன்றியதும் அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பதற்கான சில பயிற்சிகள் மூலம் இதைச் சரிசெய்துவிடலாம். மற்றொன்று, இருமல், தும்மல், பலமாகச் சிரித்
தல் போன்ற, அடிவயிற்றுக்கு அழுத்தம் தரக்
கூடிய செயல்களின்போது சிறுநீர் கசிந்து விடுவது. சிறுநீர்ப்பை வாய் பலமிழந்து போவதாலேயே இந்த நிலைக்கு ஆளாகிறார்கள். பெண்கள் பலரும் இதை வெளியே சொல்லக் கூச்சப்பட்டு, பல வருடங்களாக, பொது நிகழ்ச்சிகளில் பங்கு
பற்றாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக்கொள் கிறார்கள்.சிறுநீர்ப்பை வாய் அருகில் ஒரு ‘டேப்’பை ஒட்டி விடுவதன் மூலம் இதனை எளிதாக குணப்படுத்திவிட இயலும். தற்போது பல குழந்தைகளும் பிறக்கும் போதே சிறு
நீரகக் குறைபாடுகளுடன் - முக்கியமாக, சிறு
நீர்ப் பாதையில் தடைகளுடன் பிறக்கிறார்கள். இதை Congenital Pelvi Ureteric Junction Obstruction என்போம். இதை, கர்ப்பத்தில் குழந்தை இருக்கும்போதே கண்டு பிடித்துவிடலாம்.
குழந்தை பிறந்ததும் அடைப்பை அடை யாளம் கண்டு சிகிச்சை அளிக்கலாம். இதுபோலவே, சிறுநீரானது சிறுநீர்ப் பையில் இருந்து சிறுநீர் தாரைக்கு இறங்காமல், மேல் பகுதிகளுக்கு ஏறுவதும் குழந்தைகளுக்கு உண்டாகக்கூடிய ஒரு பிரச்சினைதான்.
அதேபோல் ஒரு குழந்தை உடல் பருமன், சிறுநீரக கோளாறு, இதய கோளாறு, தூக்கத்தின்போதான சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட சில பிரச்சினைகளால் பாதிக் கப்பட்டால் முதலில் நாங்கள் அந்த குழந்தைகளின் இரத்த அழுத்தத்தை பரி சோதிப்போம். ஏனெனில் குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கிற தென்றால், அதற்கு சிறுநீரகம் தொடர்பான பிரச் சினை இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இதுபோன்ற பெரும்பாலான பிரச்சி னைகளுக்கு தற்போது எண்டாஸ்கோப்பி சிகிச்சை மூலம் தீர்வுகாண முடியும்.
மேலும் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 0091-7373099414 மற்றும் மின்னஞ்சல் முகவரி rmsathish@gmail.com
சந்திப்பு: பரத் தொகுப்பு: புகழ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM