இலங்கைக்கு கடத்தவிருந்த கேரள கஞ்சாவை கடலில் வீசி சென்ற கடத்தல்காரர்கள் - கஞ்சவை மீட்ட பொலிஸார்

Published By: Digital Desk 4

30 Jan, 2020 | 02:14 PM
image

இலங்கைக்கு கடத்திச்  செல்லும் போது மெரைன் பொலிஸாரை கண்டதும் கடலில் வீசி சென்ற கேரள கஞ்சா பொதிகளை  மெரைன் பொலிஸார் இன்று வியாழக்கிழமை காலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்

இராமேஸ்வரம் அருகே தனுஸ்கோடி சேரான்கோட்டை  கடற்கரைப் பகுதியிலிருந்து  இலங்கைக்கு கேரள  கஞ்சா கடத்த இருப்பதாக மெரைன் பொலிஸாருக்கு  இரகசிய தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து கடலோர பொலிஸ் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பொலிஸார் நான்கு குழுக்களாக பிரிந்து கடற்கரை பகுதிகளில் ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த நபர்கள் பொலிஸாரை கண்டதும் படகில் இருந்த பொதிகளை கடலில் வீசி விட்டு சென்றனர்.

இதனை கண்ட மெரைன் பொலிஸார் தப்பி சென்ற படகை பிடிக்க கடலுக்குள் விரைந்தனர்.

 ஆனால் படகு சற்று நேரத்தில்  மாயமானது. கடலில் இருந்து வீசப்பட்ட பொதிகளை கைபற்றிய மெரைன் பொலிஸார் சோதனை செய்ததில் அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து தப்பி சென்ற படகு குறித்து மெரைன் பொலிஸார்  இந்திய - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய ,இலங்கை கடற்படையினருக்கு தகவல் வழங்கி படகை தேடி வருகின்றனர்.

.மேலும் குறித்த  கடத்தல் சம்பவத்தின் போது இலங்கையை சேர்ந்த நபர்கள் யாரும் தனுஸ்கோடி பகுயில் மறைந்துள்ளனரா? அல்லது தமிழகத்தை சேர்ந்த கடத்தல் காரர்கள் பொலிஸாரை கண்டதும் தீவுகளில் மறைந்துள்ளனரா? என்பது குறித்து கரையோரங்களிலும் தீவு பகுதிகளிலும்   மெரைன் பொலிஸார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதன் போது கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட பொதிகளிலிருந்து சுமார் 8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் குறித்து இராமேஸ்வரம், தனுஸ்கோடி மற்றும் கீழக்கரைப் பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 சமிபகாலமாக இராமநாதபுரம் கடலோரப்பகுதிகளிலிருந்து போதைப்பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08