வவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ந.கபிலநாத்தின் ''22 முகங்கள்'' நூல் வெளியீடு எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஓய்வு பெற்ற வவுனியா கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி க.சுவர்னராஜா தலைமையில் வவுனியா குடியிருப்புப் பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வில்,பிரதம விருந்தினராக மூத்த ஊடகவியலாளரும் ஆய்வாளருமான தமிழ்நிதி அருணா செல்லத்துரை கலந்துகொள்ளவுள்ளதுடன் சிறப்பு விருந்தினராக வீரகேசரி நாளிதழின் ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜனும் கெளரவ விருந்தினர்களாக பிரபல வர்த்தகர் ச.இராசலிங்கம் மற்றும் மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் செ.சபாநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதேவேளை, தமிழ்த் தாய் வாழ்த்தினை செல்வி பாலேந்திரன் பானுஜாவும் வரவேற்புரையை கோ.சிவநேசலிங்கமும் நூல் அறிமுகவுரையை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பத்மாவதி ஜெயச்சந்திரனும் நூல் ஆய்வுரையை வவுனியா வடக்கு ஆசிரியர் வள நிலையத்தின் முகாமையாளர் சு.ஜெயச்சந்திரனும் நிகழ்த்தவுள்ளனர்.
கெளரவ பிரதியை நூலாசிரியரின் தந்தை செ.நவரத்தினம் பெறவுள்ளதுடன் நிகழ்ச்சியை ஊடகவியலாளர் கோ.ரூபகாந் தொகுத்து வழங்கவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM