மட்டக்களப்பில் 200க்கும் மேற்பட்டோர் டெங்கினால் பாதிப்பு

Published By: Daya

29 Jan, 2020 | 04:54 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் தாக்கம் அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்குப் பொறுப்பான வைத்தியர் வி.குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு  ஜனவரி 18ஆம் திகதி முதல் 2020 ஜனவரி 24ஆம் திகதி வரையும் 201 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

குறித்த நோயாளர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 38 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

மேலும்,  ஆரையம்பதியில் 35, களுவாஞ்சிகுடியில் 21, வாழைச்சேனையில்16, செங்கலடியில் 22, காத்தான்குடியில் 14, ஏறாவூரில் 05, வெல்லாவெளியில் 04, வவுணதீவில் 06, பட்டிப்பளையில் 06, ஓட்டமாவடியில் 10, கோறளைப்பற்று மத்தியில் 18, கிரானில் 06 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை களுவாஞ்சிகுடி பிரதேசத்தில்  ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்தமாகக் கடந்த வாரம் 201 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

எனவே மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயற்பட்டு வீடுகளில் தேங்கிக் கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெறுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் கோரிக்கை விடுத்துள்ளார் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர்...

2025-06-15 16:44:08
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று...

2025-06-15 16:53:45
news-image

31 இலட்சம் ரூபா மதிப்புள்ள வெளிநாட்டு...

2025-06-15 16:52:47
news-image

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-06-15 16:58:48
news-image

யாழில் வாள் வெட்டு ; நால்வர்...

2025-06-15 16:26:23
news-image

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மு.கா....

2025-06-15 16:14:01
news-image

டயகம பிரதேச வைத்தியசாலையில் அடிப்படை வசதிகளை...

2025-06-15 16:06:15
news-image

கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்...

2025-06-15 15:49:46
news-image

ராகமவில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர்...

2025-06-15 16:17:44
news-image

ஜூன் மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40...

2025-06-15 14:29:11
news-image

தலைமைத்துவங்களும், மக்களும் கொண்டிருக்கும் நம்பிக்கையை பாதுகாக்க...

2025-06-15 14:15:50
news-image

நாட்டின் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை

2025-06-15 14:03:20