பிணைமுறி மோசடியின் பிரதான சூத்திரதாரி அர்ஜுன மகேந்திரன் என ரணிலே தெளிவாக கூறியுள்ளார் - வீரகுமார திஸாநாயக்க

Published By: Digital Desk 3

29 Jan, 2020 | 04:32 PM
image

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் பிணை முறி மோசடியின் பிரதான சூத்திரதாரி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்று தெளிவாகக் கூறியிருக்கிறார் என  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் நாம் செயற்படுவதாக போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய தேவை சுதந்திரக் கட்சிக்கு கிடையாது. இதற்கு முன்னரும் நாம் அவ்வாறு செயற்பட்டதில்லை. இனியும் செயற்படப் போவதில்லை.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் பிணை முறி மோசடியின் பிரதான சூத்திரதாரி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.

அத்தோடு அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, கபிர் ஹசிம் உள்ளிட்டோருக்கும் இந்த பாரிய மோசடியில் பங்குண்டு.

எனவே அர்ஜூன மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11