மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் பிணை முறி மோசடியின் பிரதான சூத்திரதாரி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்று தெளிவாகக் கூறியிருக்கிறார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் நாம் செயற்படுவதாக போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய தேவை சுதந்திரக் கட்சிக்கு கிடையாது. இதற்கு முன்னரும் நாம் அவ்வாறு செயற்பட்டதில்லை. இனியும் செயற்படப் போவதில்லை.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன மகேந்திரன் பிணை முறி மோசடியின் பிரதான சூத்திரதாரி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.
அத்தோடு அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, கபிர் ஹசிம் உள்ளிட்டோருக்கும் இந்த பாரிய மோசடியில் பங்குண்டு.
எனவே அர்ஜூன மகேந்திரன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM