நாட்டின் பல பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துகளில் நால்வர் பலி, ஒருவர் காயம்

29 Jan, 2020 | 04:08 PM
image

நாட்டின் பல பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பதுளை - எல்ல

புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை எல்ல - 9 ஆம் பலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பதுளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்ட நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்துளளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

விபத்தின் போது தெமோதரை - பிரதேசத்தை சேர்ந்த 59 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தெமோதரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

பெலியத்த

இதேவேளை, பெலியத்த - ஹக்மண பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ள்ளார். மின்சார திருத்த பணிகளில்ஈடுப்பட்ட ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பெலியத்த - ஹக்மண  லன்தேவில பகுதியில் இரண்டு மின்சார திருத்த பணியாளர்கள் மின்கம்பத்தின் மீது மின்சார புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதன் போது  பெலியத்த பிரதேசத்திலிருந்து ஹக்மன நோக்கி பயணித்த லொறி கட்டுப்பாட்டை இழந்து குறித்த மின் கம்பத்தின் மீது மோதியுள்ளது.

இந்நிலையில் மின் கம்பத்தின் மீதி பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பணியாளர்களும் கீழே விழுந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விபத்தின் போது பலத்த காயங்களுக்குள்ளான இருவரும் பெலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் தங்கல்ல வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

59 வயதுடைய லக்மன பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு உயிரழந்துள்ளார். ,சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டு நிலையில் மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

அக்மீமன

அத்துடன் , அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிவேக நெடுஞ்சாலையின் பின்னதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகள விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி வேகா கட்டுப்பாட்டையிழந்து பாதையில் எதிர் திசையில் வந்த ஜீப் ரக வாகனத்தில் மோதியுள்ளது.

இதன் போது முச்சக்கர வண்டி சாரதி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர். விபத்தில் 28 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் ஜீப் ரக வாகன சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணிகளை அக்மீமன பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர்.

வேயங்கொட

இதேவேளை, வேயங்கொட - நிட்டம்புவ புனித மரியாள் வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டுநாயக்க நோக்கி பயணித்த கார் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி  விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன் போது மோட்டார்  சைக்கில் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார். 19 வயதுடைய கண்டி  பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில் காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை வெயாங்கொட பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31