ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு

Published By: Daya

29 Jan, 2020 | 04:13 PM
image

சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று புதன்கிழமை நுகேகொட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக விசாரணைளை மேற்கொண்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கடந்த 14 ஆம் திகதி மாதிவெலயிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து ரஞ்சன் ராமநாயக்கவை கைதுசெய்தனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியான தொலைபேசி உரையாடல்கள் மூலம் ரஞ்சன் ராமநாயக்க, நீதிபதிகளின் செயற்பாடுகளுக்கு தலையீடு செய்துள்ளதாகவும் இது அரசியலமைப்பின் 111 ஆவது சரத்தின் கீழ் குற்றம் எனத் தெரிவித்து அவர் கைதுசெய்யப்பட்டார்.

இதனை அடுத்து இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சர்வதேச நீதி...

2024-03-30 14:02:00
news-image

சிறுவர்களிடையே பரவும் கை, கால், வாய்...

2024-03-30 13:09:28
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த நால்வர்...

2024-03-30 13:02:27
news-image

“லொகேஷன் குடு மல்லி” கைது

2024-03-30 12:13:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு...

2024-03-30 11:57:02
news-image

கோடரியால் தாக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-30 12:55:30
news-image

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

2024-03-30 12:06:22
news-image

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 13 பெண்கள் உட்பட...

2024-03-30 12:57:31
news-image

மனித பாவனைக்குதவாத 15 கோடி ரூபா...

2024-03-30 11:50:22
news-image

ஏப்ரலில் முழு சூரிய கிரகணம் !

2024-03-30 11:30:41
news-image

யாழ் மாநகரத்தினை தூய்மையாக்கும் பணி முன்னெடுப்பு

2024-03-30 11:55:29
news-image

மியான்மாரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்துவதற்காக கடத்தப்பட்ட...

2024-03-30 12:04:40