எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவிப்பார். அதன் மூலமாக புதிய அரசாங்கத்தை அமைத்து வரவு–செலவுத்திட்டமொன்றை முன்வைக்க முடியும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன் காலிப் பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
கடந்த 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பாராளுமன்றமே எமக்கு கிடைத்திருக்கிறது. ஸ்திரமற்ற பாராளுமன்றத்துக்குப் பதிலாக பலமான ஸ்திரமான ஒரு பாராளுமன்றமே நாட்டுக்கு அவசியமாக இருக்கின்றது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக பாராளுமன்றத்தை நான்கரை வருடங்கள் முடியும் வரை ஜனாதிபதியினால் கலைக்க முடியாது.
முன்னைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய சட்டங்களினால் முழுநாட்டையும் குழப்பியிருக்கின்றனர். எனவே மார்ச் மாதம் 1ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பார்.
அதனூடாக புதியதொரு பாராளுமன்றம் உருவாகும். அதன் மூலமாக நாட்டை புதியதொரு பாதைக்கு கொண்டுசெல்ல முடியும். புதிய வேலைத்திட்டங்களை உருவாக்க முடியும். அத்துடன் புதிய பாராளுமன்றம் அமைந்த பின்னர் வரவு–செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து நாட்டை பலமான அபிவிருத்தியை நோக்கி கொண்டுசெல்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM