இலங்கையில் தங்கியிருக்கும் சீனர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாவென கண்டறிய வேண்டும் - தயாசிறி

Published By: Digital Desk 3

28 Jan, 2020 | 05:01 PM
image

 (எம்.மனோசித்ரா)

இலங்கையில் தங்கியிருக்கும் சீனர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றுள்ளதா என்பதை முதலில் கண்டறிய வேண்டும் என  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 

சீனாவில் உருவாகி பரவியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார். இலங்கையில் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இணங்காணப்பட்டுள்ள பெண் சீனா பிரஜையாவார். அவருக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

எனினும் சீன பிரஜைகளுக்கு பயணத்தடை விதிப்பதால் மாத்திரம் கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட முடியாது. ஏற்கனவே வருகை தந்தவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனரா என்பதை கண்டறிய வேண்டியதற்கான நடவடிக்கைகளையே நாம் முன்னெடுக்க வேண்டும். 

எம்மால் இயன்றவரை கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாதிருப்பதற்கான நடவடிக்கைகளில் அவதானம் செலுத்த வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14