(ஆர்.விதுஷா)
சீனாவிலிருந்து பரவும் கொரோனா வைரசின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் , வைரஸ் தொற்று தொடர்பில் உறுதிப்படுத்துவதற்கு ஏற்ற வகையிலான அதி நவீன தொழில் நுட்ப வசதிகள் நாட்டில் இல்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க அவ்வாறான குறைபாடுகள் காணப்படின் அதனை நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த வைரசின் பாரதூரமான விளைவுகளை கருத்தில் கொண்டு முன்னெடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்பதுடன், சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள மாணவர்களின் குருதி மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகோத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :
கொரோனாவைரசின் தாக்கம் உலகளாவிய ரீதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
சுகாதாரத் துறையை பொறுத்தமட்டில் அதியுயர் அபாயகர எச்சரிக்கை விடுக்கப்பட்டடுள்ள காலப்குதியாகவே இது காணப்படுகின்றது.
கடந்த 27 ஆம் திகதி உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டிருந்த அறிக்கையின் பிரகாரம் , 2498 பேர் வரையில் உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அதேவேளை , 2741 பேர் சீனாவில் மாத்திரம் இந்த வைரசின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களில் 106 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
அந்த வகையில் இலங்கை உட்பட 11 நாடுகளுக்கு இந்த நோயின் தாக்கம் பரவியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் , உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையின் சுகாதார தரப்பினருக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இந்நிலையில் உயிரியல் பாதுகாப்பு மட்டம் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
நோய் தொற்றுக்கு உள்ளானவர்களுடைய குருதி மற்றும் ஏனைய மாதிரிகளை சோதனை செய்யும் அதிகாரிகளுக்கும் இந்த வைரசின் தாக்கம் ஏற்படுவதற்காக ஆபத்தான நிலைமை காணப்படுகின்றது.
அத்துடன் வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் உட்பட சுகாதாரத் துறை அதிகாரிகளும் இதனால் பாதிப்புக்குள்ளாக கூடும்.
அதனை தடுக்க வேண்டியது அவசியமானதாகும். அத்துடன், வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவரிடமிருந்து ஏனைய மனிதர்களுக்கு வைரசின் தாக்கம் ஏற்படுவதற்கான ஆபத்தான நிலைமை நான்காம் பாதுகாப்பு மட்டமாகும்.
ஆகவே ,இத்தகைய ஆபத்தான நிலைமையை எதிர்கொள்வதற்கு ஏற்றவகையிலான நடவடிக்கைகளை துரிதமான மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். என அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM