கொரோனா வைரஸின் எதிரொலி ! ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை !

Published By: Digital Desk 3

28 Jan, 2020 | 01:08 PM
image

கொரோனா  வைரஸ்  தாக்கத்தையடுத்து சுகாதார நடைமுறைகளை பேணுவது தொடர்பில் ஹோட்டல்  உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா ஹோட்டல் சங்கம் (THASL) தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதில் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர், குறிப்பாக ஒவ்வொரு  30 நிமிடங்களுக்கும் கை கழுவுதல் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மேலும், "பணியாளர்கள் மற்றும் விருந்தினர்களின் நலனை கவனமாக கண்காணிக்க வேண்டும்" அத்தோடு நிலைமை மோசமடைந்தால்  உடல் வெப்பநிலையை கண்காணிக்க வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்களுக்கு இலங்கை சுற்றுலா ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து விருந்தினர்களின் தரவுகளை உறுதிப்படுத்த முழுமையான தொடர்புத் தகவல் தேவைப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நோய் தொற்று நபலையும் கண்டுபிடிக்க முடியும். அந்த நபர் தொடர்பு கொள்ளக்கூடிய எவரையும் தொடர்பு கொள்ளலாம்.

பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சுத்திகரிப்பு இரசாயனங்கள் உடனடியாக கிடைக்க கூடியதாக இருக்க வேண்டும்.

மேலும் N95 வகை முகமூடிகள் சூழ்நிலைகளில் மிகவும் பொருத்தமானவை என்று கூறப்படுகிறது.

மேலும், விருந்தினர் பகுதிகள், முன் மேசை மற்றும் உணவகங்களில் கை சுத்திகரிப்பு உபகரணம் (  hand sanitizers) கிடைப்பதை உறுதி செய்ய ஹோட்டல்களை இலங்கை சுற்றுலா ஹோட்டல் சங்கம் கோரியுள்ளது.

கொரோனா வைரஸை எதிர்த்து, விழிப்புடன் இருக்கவும், நல்ல சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது பீதி அடைவதற்கான அறிவுறுத்தல்கள் அல்ல, எச்சரிக்கையாகவும் தயாராகவும் இருக்குமாறு உறுப்பினருக்கு அனுப்பப்பட்ட அறிவுறுத்தல்கள் என இலங்கை சுற்றுலா ஹோட்டல் சங்கம் கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37