பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கான அமைச்சரின் பதில் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இடையே சுவாரஷ்யமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 23 இன் கீழ் 2 என்ற பிரிவின் கீழ் டக்ளஸ் தேவானந்தா எம்.பி அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் ரி.எம். சுவாமிநாதனிடம் பல கேள்விகளைத் தொடுத்தார்.
இதற்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் சுவாமிநாதன் நீங்கள் இப்போது கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு 2 வார கால அவகாசம் வேண்டும். எனினும் நீங்கள் முன்னர் கேட்ட கேள்விகளுக்கு பதில் இருக்கின்றன என்றார்.
சரி அப்படியானால் அதனைக் கூறுங்கள் என டக்ளஸ் எம்.பி கேட்டார். எந்த திகதிகளில் கேள்விகளை கேட்டீர்கள் எனச் சொன்னால் அதற்கான பதிலை வழங்குகின்றேன் என அமைச்சர் சுவாமிநாதன் கூறினார்.
சரி எனக் கூறிய டக்ளஸ் எம்.பி நான்கு திகதிகளை குறிப்பிட்டு அந்தக் கேள்வியையும் அமைச்சருக்கு நினைவுப்படுத்தினார்.
ஆனால் நீங்கள் குறிப்பிட்ட திகதிகளுக்கான பதில்கள் என்னிடம் இல்லை வேறு தினங்களில் கேட்ட கேள்விகளுக்குத் தான் பதில்கள் இருக்கின்றதென அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
நான் இங்கு நிறையக் கேள்விகளை கேட்டிருக்கின்றேன். பதில்கள் சிலவற்றுக்குத் தான் கிடைத்துள்ளன. பரவாயில்லை என உங்களிடம் உள்ள பதில்களை கூறுங்கள் என்றார் டக்ளஸ் தேவானந்தா எம்.பி..
சரி எந்தக் கேள்விக்கான பதிலை எதிர்ப்பார்க்கின்றீர்கள் என அமைச்சர் சுவாமிநாதன் கேட்டார்.
நீங்கள் எந்தக் கேள்விக்கு பதில் வழங்க விரும்புகின்றீர்கள் என டக்ளஸ் எம்.பி. திருப்பி கேட்டார்.
நீங்கள் விரும்பும் கேள்விக்கு பதில் தருகின்றேன் என்றார் அமைச்சர். பரவாயில்லை நீங்கள் விரும்பும் பதிலை தாருங்கள் என்றார் டக்ளஸ். இல்லை இல்லை நீங்களே கூறுங்கள் என்றார்.
நீங்கள் விரும்பும் பதிலை கூறுங்கள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் கூறுங்கள் அதுவும் முடியாது விட்டால் சபாபீடத்தில் வையுங்கள் பரவாயில்லை என்றார் டக்ளஸ்.
சரி அப்படியானால் நான் சபா பீடத்தில் வைக்கின்றேன் என்ற அமைச்சர் கூற அதற்கு டக்ளஸ் எம்.பி. நன்றி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM