டக்ளஸ் எம்.பி. க்கும்   சுவாமிநாதனுக்கும்  இடையில் சுவராஷ்ய வாத பிரதிவாதம்  

Published By: MD.Lucias

11 Jun, 2016 | 08:49 AM
image

பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கான அமைச்சரின் பதில் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இடையே சுவாரஷ்யமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. 

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 23 இன் கீழ் 2 என்ற பிரிவின் கீழ்  டக்ளஸ்  தேவானந்தா எம்.பி அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் ரி.எம். சுவாமிநாதனிடம் பல கேள்விகளைத் தொடுத்தார். 

இதற்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் சுவாமிநாதன் நீங்கள் இப்போது கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க எனக்கு 2 வார கால அவகாசம் வேண்டும். எனினும் நீங்கள் முன்னர் கேட்ட கேள்விகளுக்கு பதில் இருக்கின்றன என்றார். 

சரி அப்படியானால் அதனைக் கூறுங்கள் என டக்ளஸ் எம்.பி கேட்டார்.  எந்த திகதிகளில் கேள்விகளை கேட்டீர்கள் எனச் சொன்னால் அதற்கான பதிலை வழங்குகின்றேன் என அமைச்சர் சுவாமிநாதன் கூறினார். 

சரி எனக்  கூறிய டக்ளஸ் எம்.பி நான்கு  திகதிகளை குறிப்பிட்டு அந்தக் கேள்வியையும் அமைச்சருக்கு நினைவுப்படுத்தினார்.  

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட திகதிகளுக்கான பதில்கள் என்னிடம் இல்லை வேறு தினங்களில் கேட்ட கேள்விகளுக்குத் தான் பதில்கள் இருக்கின்றதென அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.

நான் இங்கு நிறையக் கேள்விகளை கேட்டிருக்கின்றேன். பதில்கள் சிலவற்றுக்குத் தான் கிடைத்துள்ளன. பரவாயில்லை என உங்களிடம் உள்ள பதில்களை கூறுங்கள்  என்றார் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.. 

சரி எந்தக் கேள்விக்கான பதிலை எதிர்ப்பார்க்கின்றீர்கள் என அமைச்சர் சுவாமிநாதன் கேட்டார். 

நீங்கள்  எந்தக் கேள்விக்கு பதில் வழங்க விரும்புகின்றீர்கள் என டக்ளஸ் எம்.பி. திருப்பி கேட்டார். 

நீங்கள் விரும்பும் கேள்விக்கு பதில் தருகின்றேன் என்றார் அமைச்சர். பரவாயில்லை நீங்கள் விரும்பும் பதிலை தாருங்கள் என்றார் டக்ளஸ். இல்லை இல்லை நீங்களே கூறுங்கள் என்றார். 

நீங்கள் விரும்பும் பதிலை கூறுங்கள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் கூறுங்கள் அதுவும் முடியாது விட்டால் சபாபீடத்தில் வையுங்கள் பரவாயில்லை என்றார் டக்ளஸ். 

சரி அப்படியானால் நான் சபா பீடத்தில் வைக்கின்றேன் என்ற அமைச்சர் கூற அதற்கு டக்ளஸ் எம்.பி. நன்றி தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19