மோசடிகளை மூடிமறைக்கும் ஜனாதிபதி - பிரதமர் ஆகியோரே முதல் மோசடிக்காரர்கள் - அஜித் மன்னம்பெரும 

Published By: Vishnu

26 Jan, 2020 | 03:54 PM
image

(எம்.மனோசித்ரா)

மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரங்களை மறந்து ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளைக் கொண்டு ஆட்சி நடத்தும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுமே இன்று மோசடிக்காரர்களாகியுள்ளனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது : 

மத்திய வங்கி பிணை முறி மோசடிக்காரர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதாகக் கூறியே ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சியை பொறுப்பேற்றது. 

ஆனால் தற்போதே அவர்களே அதிலிருந்து பின்வாங்குகின்றனர். இதன் மூலம் ஜனாதிபதியும் பிரதமரும் மோசடிக்காரர்களாகியுள்ளனர். தற்போது வங்கிகளில் பண மோசடிகள் இடம்பெறுவதில்லை. மாறாக மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் விற்பனை மூலம் பணம் கொள்ளையிடப்படுகிறது. 

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகளைக் கொண்டே தற்போதைய அரசாங்கம் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கிறது. அவற்றியிலேயே அனைவரும் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் மஹிந்தவுக்கும் கோதாபயவுக்கும் இடையிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் யாரும் கேள்வியெழுப்புவதில்லை. ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவின் அக்கிராசன உரையன்று பாராளுமன்ற சம்பிரதாயப்படி சபாநாயகரும் பிரதமரும் இணைந்தே அவரை வரவேற்றிருக்க வேண்டும். அதுவே வழமையாக பின்பற்றப்படும் முறைமையாகும். ஆனால் இந்த முறை அவ்வாறு பிரதமரால் ஜனாதிபதி வரவேற்கப்படவில்லை. இது குறித்து யாரும் கேள்வியெழுப்பவும் இல்லை என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-01-22 13:26:40
news-image

பாடசாலை மாணவி கடத்தல் ;  பதில்...

2025-01-22 13:23:20
news-image

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக...

2025-01-22 13:23:42
news-image

அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றோம்...

2025-01-22 13:08:48
news-image

சிறைச்சாலை கைதிக்கு புகையிலைகளை கொண்டு சென்றவர்...

2025-01-22 13:03:48
news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

இலங்கையில் பதில் துணைவேந்தர்களுடன் இயங்கும் பல்கலைக்கழகங்களின்...

2025-01-22 12:58:57
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான...

2025-01-22 12:41:05