நிர்பயா விவகாரம்- காலத்தை இழுத்தடிப்பதற்கு குற்றவாளிகள் தொடர்ந்தும் முயற்சி-விசம்ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டு

25 Jan, 2020 | 02:47 PM
image

நிர்பாய விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வினய் குமாருக்கு மெதுவாக கொல்லும் விசம் ஏற்றப்பட்டுள்ளது என அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

வினய் குமாரின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

வினய் குமாருக்கு  மெதுவாக கொல்லும் விசம் ஏற்றப்பட்டுள்ளது .இதன்  காரணமாக அவர் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,என தெரிவித்துள்ள சட்டத்தரணி அதிகாரிகள் மருத்துவ அறிக்கையை வழங்க மறுக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

வினய் எழுதிய 160பக்க நாட்குறிப்பை அதிகாரிகள் வழங்கவில்லை எனஅவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 22 ம் திகதி இந்த நாட்குறிப்பை கேட்டிருந்தேன் ஆனால் இன்னமும் அவர்கள் அதனை வழங்கவில்லை, அது சிறையிலேயே உள்ளது என சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

கருணை மனு தொடர்பில் இந்த நாட்குறிப்பு முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

மெதுவாக கொல்லும் விசம் தொடர்பில் சிறைச்சாலையில் வினய்க்கு கிசிச்சைவழங்கப்பட்டதை நிருபிக்க முயல்கின்றோம்,அவரது கை முறிக்கப்பட்டது, அவரிற்கு விசம் கொடுக்கப்பட்டது,இது தொடர்பான ஆவணங்களை எங்களிடம் வழங்கவில்லை என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

வினய் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் சரியாக உணவுஉண்பதில்லை,இவற்றையெல்லாம் ஜனாதிபதி கருத்தில் கொள்ளவேண்டும் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எனினும் நீதிமன்றம் அவரது வேண்டுகோளை நிராகரித்துள்ளது.

குற்றவாளிகள் தங்களுடைய ஆவணங்கள் பொருட்களை திகார் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகள்ஏற்கனவே பொருட்களை வழங்கிவிட்டார்கள் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08