(இராஜதுரை ஹஷான்)
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை பிரதமராக தெரிவு செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தற்போது மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெறும் கனவாகவே அமையும். பொதுத்தேர்தலில் அந்தக் கட்சியை மக்கள் முழுமையாக புறக்கணிப்பார்கள் என துறைமுக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவும் தொடர்ந்து இணக்கமாக செயற்பட முடியாது என்று எதிர்த்தரப்பினர் தற்போது தவறான அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். பிரதமராக சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியுடன் இணைந்து பலமான அரசாங்கத்தை கொண்டு செல்வதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் குறிப்பிடுவது நகைப்புக்குரியது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை பிரதமராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னெடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெறும் கனவாகவே அமையும். ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை புறக்கணித்த மக்கள் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியையும் முழுமையாக புறக்கணிப்பார்கள். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் எவ்வித அதிகார போட்டி தொடர்பான முரண்பாடுகளும் தோற்றம் பெறவில்லை.
இருவரும் ஒன்றிணைந்தே சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக் ஷ பொருத்தமானவர் என்பதை பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடை யில் அதிகார முரண்பாட்டை தோற்று வித்துள்ள அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். இதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான ஆதரவு அவசியமாகும். அரசியல் ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு நிலையான பாராளுமன்றத்தை தோற்றுவிக்க வேண்டுமாயின் மக்கள் பெரும்பான்மையான ஆதரவினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கவேண் டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM