ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாவின் வெற்றி குறித்து ஆரூடம் கூறியவரே ரஞ்சித் - டக்ளஸ்

Published By: Daya

25 Jan, 2020 | 12:01 PM
image

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றி குறித்து முன்கூட்டியே ஆரூடம் கூறியவர்களில் அமரர் ரஞ்சித் டி சொய்சா முதன்மையானவர் என்றே கூற வேண்டும் என கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

காலஞ்சென்ற சகோதர  பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தொடர்பிலான அனுதாபப் பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில்  இடம்பெற்றபோது அதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

இன்றைய எமது மக்கள் விரும்பிய ஆட்சி உருவாகுவதற்கு அயராது உழைத்திருந்தவர்களில் அமரர் ரஞ்சித் டி சொய்சா முக்கியமானவர் என்றே குறிப்பிட வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றி குறித்து முன்கூட்டியே ஆரூடம் கூறியவர்களில் அமரர் ரஞ்சித் டி சொய்சா முதன்மையானவர் என்றே கூற வேண்டும்.

2010ஆம் ஆண்டு முதற்தடவையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டு இரண்டு தடவைகள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இக்காலகட்டங்களில் அவர் பாராளுமன்றத்தில் இளைஞர் விவகாரம்,  விளையாட்டு கலை மற்றும் மரபுரிமைகள் தொடர்பிலான கண்காணிப்பு செயற்குழுவினதும்,  பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினது ஆலோசனை செயற்குழுவினதும் உறுப்பினராகவும் செயலாற்றியிருந்தார்.

இரத்தினபுரி மாவட்ட மக்களது அன்பை வென்ற ஒரு செயற்பாட்டு வீரராக அவர் திகழ்ந்துள்ளார் என்பதற்கு இன்றும் அம்மக்கள் அவர்மீது கொண்டுள்ள பற்றே ஆதாரமாக இருக்கின்றது.

அரசியல் கலந்துரையாடல்களாக இருந்தாலும், அரசியல் வாத விவாதங்களாக இருந்தாலும், சமூக மட்டத்துப் பிரச்சினைகளாக இருந்தாலும் அவற்றில் எல்லாம் கலந்து கொண்டு தனது திறமையை சான்றுபட நிரூபித்துள்ள பெருமைக்குரியவராக அன்னார் திகழ்ந்தார்.

அந்தவகையில், அன்னாரது இழப்பால் துயர் கொண்டுள்ள அனைவருடனும் ஈ.பி.டி.பி. கட்சியின் சார்பாகவும் எமது மக்களின் சார்பாகவும் துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன் என்று தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04