கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் மீள்பரிசீலனை முறைக்கெதிராகவும் நடுவர்களின் முறையற்ற தீர்ப்புகளுக்கெதிராகவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார தனது ஆதங்கத்தை உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லோட்ஸில் இடம்பெற்று வருகின்றது.
நேற்று ஆரம்பமான இப்போட்டியில் இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடிவருகின்றது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜெனி பேர்ஸ்டோவ் எல்.பி.டபிள்யு. முறையில் ஆட்டமிழப்பிற்காக இலங்கை அணியினரால் ஆட்டமிழப்பு கோரப்பட்டது.
இதையடுத்து ஆடுகளத்திலிருந்த நடுவர்கள் அதனை மறுக்க இலங்கை அணியினால் மீள் பரிசோதனைக்கு கோரப்பட்டது. இதையடுத்து மீள் பரிசோதனையின் போதும் ஆட்மிழப்பு வழங்கப்படவில்லை.
குறித்த ஆட்டமிழப்பு மயிரிழையில் துடுப்பாட்ட வீரருக்கு சாதகமானதால் ஜெனி பேர்ஸ்டோவ் தொடர்ந்து துடுப்பெடுத்தாடி இங்கிலாந்து அணியை ஸ்திர நிலைக்கு கொண்டு சென்றார்.
இதையடுத்து குமார் சங்கக்கார தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
மீள்பரிசீலனை முறையில் ஆட்டமிழப்பென்பது சரியாக புலப்படுகின்றபோதிலும் நடுவர்கள் பிழையான தீர்ப்பை வழங்கியதால் அத் தீர்ப்பு வீணாகிப்நாபோயுள்ளது. ஆட்டமிழப்பு மீள்பரிசீலனை முறையில் தெரியவேண்டும். இல்லாவிடில் அதுவொரு நகைச்சுவையாக மாறிவிடும்.
விக்கெட்டில் பந்து படுவது மீள்பரிசீலனையில் தெளிவாக தெரியும் போது அதற்கு நடுவரின் தீர்ப்பு தேவையில்லை. இவ்வாறு ஆட்டமிழப்பு வழங்குவது நீண்டநாட்களாகிவிட்டது.
இந்நிலையில் இலங்கை அணி எவ்வித பிரயோசனமற்ற மீள்பரிசீலனை முறைகளை இழந்து சவால்களை சந்தித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM