அரசாங்கம் இணையத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களை தடுப்பதற்கான சட்ட வரைபு பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக இணைய பாதுகாப்பு ( Cyber security act ) சட்டத்துக்கான நடவடிக்கைகளை பூர்த்தி செய்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இந்த புதிய சட்டத்தின் மூலம் சமூக இணையத்தளங்களில் அவதூறான விடயங்கள் மற்றும் தவறான கருத்துக்கள், வெறுப்புப் பேச்சுக்கள் பதிவு செய்யப்படுவதை தடுப்பதற்கும் அவ்வாறு பதிவு செய்யும் விடயங்களை உடனடியாக நீக்கிவிடுவதற்கான பொறிமுறை ஒன்றையும் சட்ட ரீதியில் அணுகுவதே இதன் நோக்கமாகும்.
விசேடமாக மதங்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சமூக இணையத்தள செயற்பாடுகளை தடுப்பதே இதன் நோக்கமாகும்.
இந்த சட்ட கட்டமைப்பு தேசிய இணையத்தள பாதுகாப்பு மூலோபாய பிரிவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள, சட்டத்தின் மூலம் குற்றச்செயல் குறித்த விடயங்கள், தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களை தடுப்பதே இதன் மற்றுமொரு நோக்கமாகும்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமால் குணரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை கணனி Sri Lanka Computer Emergency Readiness Team என்ற பிரிவு Cyber security act என்ற சட்ட வரைபை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பான கூட்டம் ஒன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்றதுடன் தயாரிக்கப்பட்டுள்ள சட்டம் தொடர்பான ஆவணமும் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM