(ஆர்.விதுஷா)
குவைத்திற்கு தொழில் நிமித்தம் சென்று அங்கு பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 52 பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரும் ஊடகப்பேச்சாளருமான ஜகத் படுகெதர தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் நேற்று இரவு 10.15 மணியளவில் யூஎல்- 230 என்ற விமான சேவையூடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்நிலையில் சகல சட்ட நடவடிக்கைகளும் பூர்த்தியானதையடுத்து ,இன்று அதிகாலை 6.15 மணியளவில் வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அவர்களது முறைப்பாடுகளை பதிவு செய்யும் நடவடிக்கைகளும் இடம் பெற்றன.
உரிய முறையில் ஊதியம் வழங்கப்படாமை , சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்தமை , துன்புறுத்தல்களுக்கு உள்ளானமை மற்றும் நாட்டின் விதிமுறைகளை மீறி செயற்பட்டமை உள்ளிட்ட காரணங்களின் காரணமாகவே, அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதுடன், பாதிகப்பட்ட பெண்களில் சிலருக்கு தமது வீடுகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து உதவியையும் வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ளது.
அதேவேளை, அவர்கள் அளித்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள வேலைவாய்ப்பு பணியகம் மேலதிக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM