மணல் ஏற்றிய வாகனம் குடை சாய்ந்ததில் சாரதி பலி

Published By: Priyatharshan

10 Jun, 2016 | 10:03 AM
image

அக்குறணை பிரதேசத்தில் ஆற்றுமணல் ஏற்றிக்கொண்டிருந்த வாகனம் ஒன்று குடை சாய்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளதாக அலவத்துகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் ஏற்றப்பயன் படுத்தப்படும் ‘லோடர்’ என்ற சுமை ஏற்றி ஒன்றே இவ்வாறு தடம் புறண்டுள்ளது. அது தடம் புறண்டதில் சாரதி கடும் காயங்களுக்கு உள்ளாகி அக்குறணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையை கண்டி போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எம்.சிவசுப்பிரமணியம் மேற்கொண்டார்.

 

தலை மற்றும் உடலின் பலபாகங்களிலும் ஏற்பட்ட கடும் காயங்கள் காரணமாக அதிகளவான குருதிப் பெருக்கம் ஏற்பட்டு இம்மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை பின்னர் அவர் சாட்சியமளித்தார்.

இதையடுத்து விபத்து காரணமாக ஏற்பட்ட மரணம் என தீர்ப்பளிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-04-28 11:46:38
news-image

ஸ்ரீ தலதா வழிபாடு ; கைவிடப்பட்ட...

2025-04-28 12:20:17
news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் 30...

2025-04-28 11:30:28
news-image

ஊழலுக்கும் குற்றங்களுக்கும் இருந்துவந்த அரசியல் பாதுகாப்பை...

2025-04-28 11:29:15
news-image

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு நிராகரிப்பு!

2025-04-28 11:11:11
news-image

பெண்ணை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக...

2025-04-28 11:09:03
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிடி, எம்ஆர்ஐ...

2025-04-28 11:29:31
news-image

பாராளுமன்ற சபாநாயகர் இன்றுவரை தனது கல்விச்...

2025-04-28 10:35:58
news-image

கண்டியில் 600 மெற்றிக் தொன் திண்மக்கழிவுகள்...

2025-04-28 10:23:31
news-image

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம்,...

2025-04-28 11:26:54
news-image

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு...

2025-04-28 09:52:57
news-image

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட...

2025-04-28 09:10:26