மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிப்பாளையம் பிரதான வீதியில் பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 8.00 மணியளவில் கல்முனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் அதன் எதிர்த்திசையில் துவிச்சக்கரவண்டியில் வந்த மீன் வியாபாரியின் மீது நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும் மீன் வியாபரியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.
மோட்டார் சைக்கிளோட்டி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமையே விபத்திற்கான காரணம் என தெரியவருகிறது. விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன முற்றாக சேதமடைந்துள்ளன.
களுவாஞ்சிக்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கெதாண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM