கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா அகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மக்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் நேற்றைய தினம் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியதை அடுத்த மண்சரிவு தொடர்பான ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல, பல்லேகம மற்றும் வில்கமுவ பிரதேச செயலகங்களிற்கு உட்பட்ட பகுதிகளுக்கும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த மண்சரிவு எச்சரிக்கை இன்று இரவு 8.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர சுட்டிக்காட்டியுள்ளார்.
மழையுடன் கூடிய வானிலையால் மிகவும் அவதானமாக செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM