(இராஜதுரை ஹஷான்)
தான் ஒரு மனநோயாளி என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஊடாக நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார். என தெரிவித்த மின்வலு இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகாக்கலில் தொடர்பான குரல் பதிவுகளை முடிந்தால் வெளியிடவும் எனவும் சவால் விடுத்தார்.
பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட விளக்மறியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உரை இன்று பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது.
அவரது உரையின் போது ஏன் ஆளும் தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதனால் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மீது நியாயம் இருப்பதாகவும் சிலர் குறிப்பிடுகின்றார்கள்.
ஐக்கிய தேசிய கட்சியின் கீழ்த்தரமான செயற்பாடுகளை நாட்டு மக்கள் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆளும் தரப்பினர் அமைதி காத்தோம்.
பிறர் குடும்பத்தில் என்ன பிரச்சினைகள் உள்ளது. எவர் திருமணமான விவாகரத்து செய்துள்ளார்கள் என்பதை ஆராய்வதற்காக மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றார்கள்.
ஊழல் மோசடி தொடர்பில் ஆராயும் பொறுப்பு தனதாக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டார். அவ்வாறாயின் பொலிஸ், நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படவில்லை என்றா இவர் குறிப்பிடுகின்றார்.
தான் ஒரு மனநோயாளி என்பதை பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஊடாக தெளிவுப்படுத்தியுள்ளார்.
குரல் பதிவுகள் தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளமை அவசியமற்றது.
சர்ச்சைக்குரிய குரல் பதிவுகளின் காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM