நிதியமைச்சர் ரவி கருநாணாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்துள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று 2.30 மணியளவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதம் இடம்பெற்ற நிலையில் 6 மணியளவில் வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு 6.30 மணியளவில் பிரேரணைத் தொடர்பான முடிவுகள் வெளியடப்பட்டன.
பிரேரணைக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 145 வாக்குகளும் அளிக்கப்பட்டதோடு 28 பேர் மன்றுக்கு சமூகமளிக்கவில்லை.
இந்நிலையில் நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இதனையடுத்து எதிர்க் கட்சியினர் கூச்சலிட்டதால் சபை நடவடிக்கைகளை பத்து நிமிடத்துக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார்.
குறித்த பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி. யின் தலைவர் அனுர குமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பி. யின் ஏனைய உறுப்பினர்கள் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த பிரேரணைத் தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துக் கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM