பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் யாழ். மாநகர சபை சுகாதார ஊழியர்கள்

Published By: Digital Desk 4

22 Jan, 2020 | 11:39 AM
image

யாழ். மாநகர சபை சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப் புறக்கணிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மாநகரசபை நுழைவாயில் முன்பாக இன்று காலை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள சுகாதார தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட தரப்புக்கள் நிறைவேற்றாது விட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் தெரிவிக்கையில், “நிரந்தர நியமனம் வழங்குமாறு பல தடவைகள் கோரியிருக்கின்றோம். ஆனால் நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கும் நிலையே உள்ளது. அதேபோல சுகாதாரத் தொழிலாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டிருக்கிறோம். அதுவும் செய்யப்படவில்லை.

இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் முன்வைத்த போதும் இதற்கான நடவடிக்கைகளை மாநகர சபை செய்து கொடுக்கவில்லை. இதனால் நாங்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

ஆகவே எமது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான தீர்வுகளை மாநகரசபை வழங்க வேண்டும். இல்லையேல் தொடர் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்து இருக்கின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பாக சபை முதல்வர் உள்ளிட்ட சபையினருக்கு தெரியப்படுத்தியுள்ளோம். ஆகையினால் உரிய நடவடிக்கையை மாநகரசபை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08