(இராஜதுரை ஹஷான்)
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இவருக்கு வெளியில் விரோதிகள் எவரும் கிடையாது.
ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளே இன்று விரோதிகள் அதிகரித்துள்ளார்கள் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பினை 200 ஆக அதிகரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எம்மை பொறுத்தவரையில் இவருக்கு சர்வதேச ரீதியிலும், தனிப்பட்ட ரீதியிலும் விரோதிகள் எவரும் கிடையாது. சர்வதேசத்தின் நமன்மதிப்பினை பெற்றுள்ளார்.
இவ்வாறான நிலையில் அவர் தனத பாதுகாப்பை பலப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது.
இலங்கை அரசியலில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் என முக்கிய பதவி வகித்த இவரது பாதுகாப்பு அரசாங்கததின் பொறுப்பாகும். இன்று ஐக்கியதேசிய கட்சியின் தலைமைத்துவ முரண்பாடு தீவிரமடைந்துள்ளது.
ஆகவே தனக்கு கட்சி தலைமையகமான சிறிகொதாவிற்குள் பாதுகாப்பு அவசியம் என்பதை கருத்திற் கொண்டு அவர் பாதுகாப்பை பலப்படுத்துமாறு குறிப்பிட்டிருக்கலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரத்தை அரசியலாக்க முடியாது. இந்த விவகாரம் முழுமையாக நீதித்துறையுடன் தொடர்புப்பட்டுள்ளது.
ஆகவே பாராளுமன்றத்தின் ஊடாக எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் முடியாது அதற்கான அவசியமும் கிடையாது. என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM