பத்தேகம முன்னாள் நீதிவான் தம்மிகவிடம் சி.சி.டி. இரண்டரை மணி நேரம் விசாரணை!

Published By: Vishnu

21 Jan, 2020 | 08:03 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள பத்தேகம நீதிவான் தம்மிக ஹேமபாலவிடம் சி.சி.டி.யினர் சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிக நேரம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பதிவுசெய்துள்ளனர்.

முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் வெளியானதை அடுத்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் ஒரு அங்கமாக இன்றைய தினம், பத்தேகம நீதிவான் தம்மிக ஹேமபாலவிடம் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விஷேட விசாரணைகளை முன்னெடுத்தது. 

அதன்படி தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின்  தலைமையகத்துக்கு அழைக்கப்பட்ட நீதிவான் தம்மிக ஹேமபாலவிடம் சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிக நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டது.

முன்னதாக கடந்த ஞாயிறன்று எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் 5 மணி நேரமும் நேற்று ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்கவிடம் 4 மணி நேரமும் விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தன. 

இந் நிலையிலேயே இன்று பத்தேகம முன்னாள் நீதிவானிடம் விசாரணைகள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31