எம்.சி.சி. தொடர்பான அனுரவின் பல கேள்விகளுக்கு சபையில் விளக்கமளித்த தினேஷ் 

Published By: Vishnu

21 Jan, 2020 | 05:43 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மிலேனியம் செலேன்ச் கோப்பரேசன் ஒப்பந்தத்தை (எம்.சி.சி.) குறித்து ஆராய எப்போது அரசாங்கம் ஆராய்வுக் குழுவை நியமித்தது? இந்த குழுவின் ஆய்வுகளின் கால எல்லை என்ன? யார் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்? இந்த உடன்படிக்கை ஆராயப்பட்ட பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படுமா மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

அனுரகுமார திசாநாயக எம்.பியின் கேள்விக்கு பதில் தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, 

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் எம்.சி.சி உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட போது அமைச்சரவையில் ஆராயாது தமது விருப்பத்திற்கு இந்த உடன்படிக்கையை செய்துகொள்ள சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டது.  

இவர்கள் நல்லாட்சி என்ற சாயத்தை பூசிக்கொண்டு செய்த நாசமான செயற்பாடுகள் குறித்து நாம் மக்களுக்கு எடுத்துக் கூறினோம். அதனை மிகவும் ஆணித்தரமாக நாம் எடுத்துக்கூறினோம். இப்போது நாம் இந்த உடன்படிக்கையை கண்மூடித்தனமாக நிறைவேற்றாது ஆராய வேண்டும் என்ற தீர்மானம் எடுத்துள்ளோம். 

இது குறித்து ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது, நான்கு மாதகால எல்லைக்குள் இந்த குழு அறிக்கையை சமர்பிக்க வேண்டும். 

இந்த குழுவில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் லலித் சிறி குனருவான் தலைமையில் டி.எஸ். ஜெயவீர, நிஹால் ஜெயவர்த்தன, நாளக ஜெயவீர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படும். நாம் ஒளிவு மறைவாக எந்த உடன்படிக்கையையும் செய்ய மாட்டோம். நாட்டுக்கு ஆரோக்கியமான வகையில் நாம் செயற்படுவோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31