திருகோணமலையில் வீடு புகுந்து திருடிய நபருக்கு 6 மாதம் கடூழிய சிறை

Published By: Digital Desk 4

21 Jan, 2020 | 02:11 PM
image

திருகோணமலை கந்தளாய் பகுதியில் இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான பொருட்களை திருடிய நபர் ஒருவருக்கு ஆறு மாதம் கட்டாய கடூழிய சிறைதண்டனை விதித்து கந்தளாய் நீதிமன்ற நீதிபதி விசானி தேனவது இன்று(21) உத்திரவிட்டார்.

வான் எல, ஜயந்திபுர, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் மற்றும் பல தடவைகள் சிறைவாசம் அனுபவித்த   ஒருவருக்கே சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  

2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கந்தளாயில் வீடொன்றினுள் புகுந்து வீட்டின் பெறுமதியான இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை திருடியதாக பொலிஸாரினால் குறித்த நபருக்கெதிராக தொடரப்பட்ட வழக்கில் சந்தேக நபரை குறித்த வழக்கில் குற்றவாளியாக இனங்கண்டு இன்றைய தினம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

குறித்த நபருக்கெதிராக திருட்டுகளில் ஈடுபட்ட நான்கு வழக்குகள் கந்தளாய் மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41