வியத்­மக அமைப்பின் பலர் பொதுத்­தேர்­தலில் கள­மி­றங்­குவர்  - புஞ்­சி­நி­லமே மீகஸ்­வத்த

Published By: R. Kalaichelvan

21 Jan, 2020 | 11:16 AM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் தொலை­நோக்கு கொள்­கை­யைத் தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு  வியத்­மக அமைப்பின் துறைசார்  நிபு­ணர்கள் பலர்  எதிர்வரும் பொதுத்­தேர்­தலில் போட்­டி­யிடத் தீர்­மா­னித்­துள்­ளனர். ஆனால் எக்­கட்­சியில் போட்­டி­யி­டு­வது என்­பது குறித்து  எவ்­வித  உத்­தி­யோ­க­ பூர்வ தீர்­மா­னங்­களும் இது­வ­ரையில் எடுக்­கப்­ப­ட­வில்லை என சிறந்த எதிர்­கா­லத்­துக்­கான நிபு­ணர்கள்(வியத்­மக) அமைப்பின் பணிப்­பாளர் புஞ்­சி­நி­லமே மீகஸ்­வத்த தெரி­வித்தார்.

வியத்­மக அமைப்பின் காரி­யா­ல­யத்தில் நேற்றுத் திங்­கட்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்,  

வியத்­மக அமைப்பின் உறுப்­பி­னர்கள் எவரும் அர­சி­யல்­வா­தி­களின் தேவை­க­ளுக்­காகச் செயற்­ப­ட­வில்லை. மாறாக நாட்­டுக்­கா­கவே செயற்­ப­டு­கின்­றார்கள். ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் அபி­வி­ருத்தித் திட்­டங்கள், பொதுக் கொள்­கைகள் அனைத்தும் பாரம்­ப­ரிய அர­சி­யல்­வா­திகள் பின்­பற்­றிய  நிலையிலிருந்து முற்­றிலும்  மாறுபட்­டுள்­ளன.  பாரம்­ப­ரிய அர­சியல்  செயற்­பா­டு­க­ளினால்  எவ்­வித முன்­னேற்­ற மும் இது­வரை  காலமும் ஏற்­ப­ட­வில்லை.

ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் கொள்­கை­களில் எவ்­வித அர­சியல் நோக்­கங்­களும் கிடை­யாது. அர­சி­ய­லுக்கு  அப்பாற் சென்று  நாடு  பொரு­ளா­தார ரீதியில் முன்­னேற்­ற­ம­டைய  வேண்டும் என்ற ஒரே கார­ணத்­துக்­கா­கவே  வியத்­மக அமைப்­பின் கடந்த காலங்­களில் இருந்து அவ­ருக்கு   பாரிய ஒத்­து­ழைப்­பை  வழங்கி  வரு­கிறது.

இன்­றைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தொடர்பில் சமூ­கத்தில் மாறுபட்ட கருத்­துகள், விமர்­ச­னங்கள் தோற்றம் பெற்­றுள்­ளன. தற்­போது  சமூக வலைத்­த­ளங்­களில் முன்­னணி  வகிக்கும்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்­கவின் குரல் பதி­வுகள் அதற்கு சிறந்த எடுத்­துக்­காட்­டாகும்.  

படித்த, அர­சியல் நோக்­க­மற்ற துறைசார் நிபு­ணர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக தெரிவு செய்­யப்­பட வேண்டும் என்­பது பெரும்­பான்மை தரப்­பி­ன­ரது பிர­தான கோரிக்­கை­யாக காணப்­ப­டு­கின்­றது. ஆகவே இடம்பெற­வுள்ள பொதுத்­தேர்­தலில் வியத்­மக அமைப்பின்  உறுப்­பி­னர்கள் பலர் நாடு­த­ழு­விய ரீதியில் போட்­டி­யிடத் தீர்­மா­னித்­துள்­ளார்கள். எந்தக்  கட்­சியில் போட்­டி­யி­டு­வது என்­பது குறித்து இது­வ­ரையில் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன இன்று உள்ளூர் மற்றும் சர்­வ­தேச மட்­டத் தில் நல் அபிப்பிராயத்தைப் பெற்றுள்ளது. பிரதான இரு கட்சிகளைக்  காட்டிலும் முன்னணி வகிக்கின்றது. ஆகவே  இக்கட்சியில் போட்டியிடுவதா அல்லது அச்சந்தர்ப்பத்தில் இதனை விட பிறிதொரு கட்சி  சிறந்தது என்று கருதினால் அக்கட்சி யில் போட்டியிடுவதா என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08