(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின் தொலைநோக்கு கொள்கையைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு வியத்மக அமைப்பின் துறைசார் நிபுணர்கள் பலர் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளனர். ஆனால் எக்கட்சியில் போட்டியிடுவது என்பது குறித்து எவ்வித உத்தியோக பூர்வ தீர்மானங்களும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என சிறந்த எதிர்காலத்துக்கான நிபுணர்கள்(வியத்மக) அமைப்பின் பணிப்பாளர் புஞ்சிநிலமே மீகஸ்வத்த தெரிவித்தார்.
வியத்மக அமைப்பின் காரியாலயத்தில் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வியத்மக அமைப்பின் உறுப்பினர்கள் எவரும் அரசியல்வாதிகளின் தேவைகளுக்காகச் செயற்படவில்லை. மாறாக நாட்டுக்காகவே செயற்படுகின்றார்கள். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவின் அபிவிருத்தித் திட்டங்கள், பொதுக் கொள்கைகள் அனைத்தும் பாரம்பரிய அரசியல்வாதிகள் பின்பற்றிய நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளன. பாரம்பரிய அரசியல் செயற்பாடுகளினால் எவ்வித முன்னேற்ற மும் இதுவரை காலமும் ஏற்படவில்லை.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கொள்கைகளில் எவ்வித அரசியல் நோக்கங்களும் கிடையாது. அரசியலுக்கு அப்பாற் சென்று நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே வியத்மக அமைப்பின் கடந்த காலங்களில் இருந்து அவருக்கு பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
இன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் சமூகத்தில் மாறுபட்ட கருத்துகள், விமர்சனங்கள் தோற்றம் பெற்றுள்ளன. தற்போது சமூக வலைத்தளங்களில் முன்னணி வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
படித்த, அரசியல் நோக்கமற்ற துறைசார் நிபுணர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது பெரும்பான்மை தரப்பினரது பிரதான கோரிக்கையாக காணப்படுகின்றது. ஆகவே இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் வியத்மக அமைப்பின் உறுப்பினர்கள் பலர் நாடுதழுவிய ரீதியில் போட்டியிடத் தீர்மானித்துள்ளார்கள். எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டத் தில் நல் அபிப்பிராயத்தைப் பெற்றுள்ளது. பிரதான இரு கட்சிகளைக் காட்டிலும் முன்னணி வகிக்கின்றது. ஆகவே இக்கட்சியில் போட்டியிடுவதா அல்லது அச்சந்தர்ப்பத்தில் இதனை விட பிறிதொரு கட்சி சிறந்தது என்று கருதினால் அக்கட்சி யில் போட்டியிடுவதா என்று இன்னும் தீர்மானிக்கவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM