எமது கட்சி ஜன­நா­யக ரீதியில் செயற்­ப­ட­வில்லை: அனுஷா சந்­தி­ர­சே­கரன்

Published By: J.G.Stephan

20 Jan, 2020 | 12:30 PM
image

மலை­யக மக்கள் முன்­ன­ணியில் தீர்­மா­னங்கள் தனிப்­பட்ட ரீதியில் ஒரு சிலரால் மாத்­தி­ரமே எடுக்­கப்­ப­டு­கின்­றன. எமது கட்சி தற்­போது ஜன­நா­யக ரீதியில் செயற்­ப­டு­வ­தில்லை. சர்­வா­தி­காரப் போக்கே தலை­தூக்­கி­யுள்­ளது என கட்­சியின்  பிரதி செய­லாளர் நாய­கமும் சட்­ட­த்தர­ணி­யு­மான அனுஷா சந்­தி­ர­சே­கரன் தெரி­வித்­துள்ளார்.

அண்­மையில் கொட்­ட­க­லையில் ஒரு ஊடக சந்­திப்­பொன்றில் மலை­யக மக்கள் முன்­ன­ணியின் நிதிச் செய­லாளர் புஸ்பா விஸ்­வ­நாதன், கட்­சியின் எவ்­வித அனு­ம­தி­யு­மின்றி  பிரதி செய­லாளர் நாயகம் அனுஷா சந்­தி­ர­சே­கரன் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடப் போவ­தா­கவும் அத்­தீர்­மா­னத்தால் கட்­சியை சிதைத்­து­விடக் கூடாது என்றும் தெரி­வித்­தி­ருந்தார்.  இதற்கு பதி­ல­ளிக்கும் முக­மா­கவே இவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், மலை­யக மக்கள் முன்­னணி என்­பது சந்­தி­ர­சே­கரன் என்­ப­வ­ரினால் கட்­டி­யெ­ழுப்­ப­ப்பட்ட ஒரு தனித்­து­வ­மான கட்­சி­யாகும். இருந்தபோதும் அன்று கட்சி என்ற ரீதியில் ஒரு ஜன­நா­யகத் தன்மை காணப்­பட்­டது. இன்று அது சிதை­வ­டைந்து வரு­கின்­றது. கட்சி என்ற வகையில் நிதிச் செய­லாளர் என்­ப­வ­ருக்கு ஊட­கங்­களில் அறிக்கை விட முடி­யாது.

பாரா­ளு­மன்­றத்தில் போட்­டி­யி­டு­வது தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் முடிவு எடுக்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில், அது சாத்­தி­யப்­ப­டாமல் போனது. இருப்­பினும், அண்­மையில் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பெ.இரா­தா­கி­ருஷ்ண­னினால் நடத்தப்பட்ட ஊடக சந்­திப்­பொன்றில் கட்சியில் மூன்று பேருக்கு மாத்­தி­ரமே தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி­யுடன் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யிட முடியும். ஆனால் அனுஷா சந்­திரசேகரன் வேண்­டு­மானால் தனிப்­பட்ட ரீதியில் போட்­டி­யி­டலாம் என தெரி­வித்­தி­ருந்தார்.

மேற்­படி அறி­விப்பு கூட கட்­சியின் யாப்­புக்கு முர­ணா­னது.  ஏனென்றால் கட்சி யாப்­பின்­படி கவுன்சில் தலை­வர்கள், மத்­திய குழு மற்றும் தேசிய சபை என்பன இணைந்து எடுக்­கப்­படும் தீர்­மா­னத்தின் படியே நடக்க வேண்டும். ஆனால் தற்­போது கட்­சியில் சர்­வா­தி­காரப் போக்கே காணப்­ப­டு­கின்­றது. நிதிச் செய­லா­ள­ரி­னாலும் தலை­வ­ரி­னா­லுமே தன்­னிச்­சை­யா­கவே முடி­வுகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றாக கட்­சியில் தொடர்ந்தும் சர்­வா­தி­கார போக்கு  வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வதன் காரணமாகவே மக்கள் மாற்று தரப்பினரை விரும்புகின்றனர். இவை தவிர இளைஞர் யுவதிகளும் இன்று கட்சியில் ஒரு மாற்றத்தையும்  ஒரு சிறந்த இளம் தலைமைத்துவத்தையும் எதிர்பார்க்கின்றனர். எனவேதான் தேர்தலில் களமிறங்க தீர்மானித்துள்ளேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58