எமது அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கான வேதனமாக ஆயிரம் ரூபா வழங்குமாறு கோரியுள்ளபோதும் பெருந்தோட்ட நிறுவனங்கள் அதனை வழங்க மறுப்பு தெரிவித்து வருகின்றன. எனவே பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை நாவலபிட்டி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச மருத்துவ முகாம் ஒன்றுக்கு வருகை தந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனை அமைச்சர் தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே.
பெருந்தோட்ட நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரும் நிதியினை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தினை வழங்குவதாக வாக்குறுதி வழங்கியிருந்தோம். ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. இருந்தாலும் பொறுப்புள்ள அரசாங்கம் என்ற அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தினை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியில் இருந்து வழங்க தீர்மானித்துள்ளோம். பெருந்தோட்ட கம்பனிகள் சம்பள உயர்வை வழங்க முடியுமாக இருந்தால் இருக்க முடியும். முடியா விட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு செல்லமுடியும்.
பெருந்தோட்ட நிறுவனங்களில் காணப்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்க எம்மால் முடியும். எமக்கு வரவு செலவு திட்டத்தை முன்வைக்க வேண்டிய தேவை இல்லை. எதிர்வரும் பொது தேர்தல் வரைக்கும் எமக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர் முறையான வரவு செலவு திட்டத்தை முன்வைத்து மக்களுக்கான சேவையினை தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM