சம்­பள உயர்வு வழங்க முடி­யா­விடில் தோட்­டங்­களை ஒப்­ப­டை­யுங்கள் - மஹிந்­தா­னந்த

Published By: Priyatharshan

20 Jan, 2020 | 10:35 AM
image

எமது அர­சாங்கம்  தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு  நாள் ஒன்­றுக்­கான வேத­ன­மாக ஆயிரம் ரூபா­ வ­ழங்­கு­மாறு கோரி­யுள்­ள­போதும் பெருந்­தோட்ட நிறு­வ­னங்கள் அதனை வழங்க மறுப்பு தெரி­வித்து வரு­கின்­றன. எனவே பெருந்­தோட்ட நிறு­வ­னங்கள் தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­ப­ளத்தை வழங்க முடி­யா­விட்டால் தோட்­டங்­களை அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைக்க வேண்டும் என்று இரா­ஜாங்க அமைச்சர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்­துள்ளார்.

 சனிக்­கி­ழமை நாவ­ல­பிட்டி பகு­தியில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த இல­வச மருத்­துவ முகாம் ஒன்­றுக்கு வருகை தந்து ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வித்­த­போதே இதனை அமைச்சர் தெரி­வித்தார்.

 இதன் போது மேலும் கருத்து தெரி­வித்த இரா­ஜாங்க அமைச்சர் மஹிந்­தா­நந்த அளுத்­க­மகே.

பெருந்­தோட்ட நிறு­வ­னங்கள் அர­சாங்­கத்­திடம் கோரும் நிதி­யினை வழங்க அர­சாங்கம் தயா­ராக உள்­ளது. ஜனா­தி­பதி தேர்­தலின் போது தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­ப­ளத்­தினை வழங்­கு­வ­தாக வாக்­கு­றுதி வழங்­கி­யி­ருந்தோம். ஆனால் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் எமக்கு வாக்­க­ளிக்­க­வில்லை. இருந்­தாலும் பொறுப்­புள்ள அர­சாங்கம் என்ற அடிப்­ப­டையில் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­ப­ளத்­தினை எதிர்­வரும் மார்ச் முதலாம் திக­தியில் இருந்து வழங்க தீர்­மா­னித்­துள்ளோம். பெருந்­தோட்ட கம்­ப­னிகள் சம்­பள உயர்வை வழங்க முடி­யு­மாக இருந்தால் இருக்க முடியும். முடியா விட்டால் தோட்­டங்­களை அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைத்­து­விட்டு செல்­ல­மு­டியும்.

 பெருந்­தோட்ட நிறு­வ­னங்­களில் காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­களை  தீர்க்க எம்மால் முடியும்.  எமக்கு வரவு செலவு திட்­டத்தை முன்­வைக்க வேண்­டிய தேவை இல்லை. எதிர்­வரும் பொது தேர்தல் வரைக்கும் எமக்­கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 எதிர்வரும் பொதுத்தேர்தலின் பின்னர்  முறையான வரவு செலவு திட்டத்தை முன்வைத்து மக்களுக்கான சேவையினை தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38