வடமராட்சி கிழக்கு மருதங்கேணி தாளையடிப் பகுதியில் வீடொன்றில் பதுக்கி வைத்திருந்த 18 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மது வரித் திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற யாழ். மற்றும் பருத்தித்துறை சாவகச்சேரி மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் வீட்டை சுற்றிவளைத்துள்ளனர்.
இதன் போது 18 கிலோ கிராம் எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்ட அதே நேரத்தில் குறித்த வீட்டிலிருந்த சந்தேக நபர்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் தப்பியோடியுள்ளதாகவும் மதுவரித் திணைக்களத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் பதுக்கி வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்ட 18 கிலோ கஞ்சாவையும் நாளை திங்கட் கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மதுவரித் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM