கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்திய 9 பேர் கைது 

Published By: R. Kalaichelvan

19 Jan, 2020 | 03:47 PM
image

(எம்.மனோசித்ரா)

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் சென்ற 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை 3.30 மணியளில் தேசிய மற்றும் வெளிநாட்டு பிரயாணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 9 சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இராஜகிரிய பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் அனைவரும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் 31 - 68 வயதுக்கு இடைப்பட்ட ஆடி அம்பலம, காலி, மினுவாங்கொடை, நீர்க்கொழும்பு, ஹதரலியத்த, வாரியபொல, சீதுவ மற்றும் வலஸ்முல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்