இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் ஒருநாள் தொடரின் இறுதியுமான கிரிக்கெட் போட்டி இன்றைய தினம் பெங்களூரில் இடம்பெறவுள்ளது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியஅணி, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
மும்பையில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த 2 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 36 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்த நிலையில் 3 ஆவதும் மற்றும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
முந்தைய ஆட்டத்தை போல் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு அவுஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்து இந்தியா தொடரை வெல்லுமா? என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சொந்த மண்ணில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-3 என்ற கணக்கில் இழந்தது.
அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது. அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு வலுவானதாக இருக்கிறது. இதனால் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்த இறுதி வரை எல்லா துறையிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM