வாகன விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டம்

Published By: J.G.Stephan

19 Jan, 2020 | 10:35 AM
image

(செ.தேன்­மொழி)

வாகன விபத்­து­க­ளினால் ஏற்­படும் பாதிப்­பு­களை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் வைத்­திய சங்கம், லொத்தர்  சபை, லயன்ஸ் கிளப் மற்றும் போக்­கு­வ­ரத்து பொலிஸ் பிரி­வினர் இணைந்து விசேட விழிப்­பு­ணர்வு வேலைத்­திட்­ட­மொன்றை ஆரம்­பித்­துள்­ளனர். 

இதன் ஆரம்­பக்­கட்ட நிகழ்­வுகள் நேற்று சனிக்­கி­ழமை வைத்­திய சங்­கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றன.

இதன்­போது சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்­ரோ­ஹண, வைத்­தியர் இந்­திக்க கரு­ணா­ரத்ன, பேரா­சி­ரியர் சமன் தர்­ம­ரத்ன, விசேட வைத்­திய நிபுணர் சஞ்­சீவ குரு­சிங்க மற்றும் கார் பந்­தய வீரர் திலந்த மார­க­முவ உள்­ளிட்ட பலரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இதன்­போது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறி­ய­தா­வது,

பொது வாக­னங்கள் போட்டிப் போட்டு செல்­கின்­ற­மை­யினால் பொது­வா­க­னங்­க­ளினால் ஏற்­படும் விபத்­துகள் அதி­க­மா­கி­யுள்­ளன. தெற்­கா­சிய நாடு­க­ளிலே எமது நாட்டில் தான் பொது வாக­னங்கள் போட்­டிப்­போட்டு செல்­கின்­றன. இந்­நி­லையில் வாகன விபத்தை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்றால் அது தனிப்­பட்ட நப­ரொ­ரு­வ­ராலோ அல்­லது குறிப்­பிட்ட சில­ராலோ  முடி­யாது. அனை­வரும் அது தொடர்பில் சிந்­திக்க வேண்டும். இந்­நாட்டை பொறுத்­த­மட்டில் மோட்டார் சைக்கிள் விபத்­து­களே பெரு­ம­ளவில் இடம்­பெற்­றுள்­ளன. ஆபத்­துக்கள் எந்த வடிவில் வரும் என்­பதை எம்மால் அறிய முடி­யாது. அதனால் எப்­போ­துமே நாம் அவ­தா­ன­மாக செயற்­பட வேண்டும். இலங்­கையில் நாளொன்றில் 2 மணித்­தி­யாலம் 49 நிமி­டத்­துக்குள் ஒருவர் வாகன விபத்தில் இறக்­கின்றார். 

இந்த விபத்­துகள் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­படும் விசா­ர­ணை­க­ளுக்­காக அர­சாங்­கத்­தி­லி­ருந்து 30 இலட்சம் ரூபா வரை பணம் செல­வி­டப்­ப­டு­கின்­றது. இதனால் எமது பொரு­ளா­தா­ரத்­துக்கே பெரிதும் பாதிப்பு ஏற்­ப­டு­கின்­றது.

மது­பானம் அருந்தி போதைப்­பொருட்­களை பயன்­ப­டுத்­தி­விட்டு வாக­னங்­களை செலுத்­து­ப­வர்­க­ளாலே விபத்­துகள் அதிகம் ஏற்படுகின்றன. கடந்த வருடம் மாத்­திரம் மது­போ­தையில் வாகனம் செலுத்­தி­ய­தாக ஒரு இலட்­சத்­துக்கும் அதி­க­மான சார­திகள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 

  மேலும், கடந்த வருடம் மாத்­திரம் வாகன விபத்­து­களால் 30 ஆயிரம் பேர் வரை உயி­ரி­ழந்­துள்­ளனர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21