(செ.தேன்மொழி)
வாகன விபத்துகளினால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வகையில் வைத்திய சங்கம், லொத்தர் சபை, லயன்ஸ் கிளப் மற்றும் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் இணைந்து விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இதன் ஆரம்பக்கட்ட நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை வைத்திய சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.
இதன்போது சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண, வைத்தியர் இந்திக்க கருணாரத்ன, பேராசிரியர் சமன் தர்மரத்ன, விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ குருசிங்க மற்றும் கார் பந்தய வீரர் திலந்த மாரகமுவ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறியதாவது,
பொது வாகனங்கள் போட்டிப் போட்டு செல்கின்றமையினால் பொதுவாகனங்களினால் ஏற்படும் விபத்துகள் அதிகமாகியுள்ளன. தெற்காசிய நாடுகளிலே எமது நாட்டில் தான் பொது வாகனங்கள் போட்டிப்போட்டு செல்கின்றன. இந்நிலையில் வாகன விபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அது தனிப்பட்ட நபரொருவராலோ அல்லது குறிப்பிட்ட சிலராலோ முடியாது. அனைவரும் அது தொடர்பில் சிந்திக்க வேண்டும். இந்நாட்டை பொறுத்தமட்டில் மோட்டார் சைக்கிள் விபத்துகளே பெருமளவில் இடம்பெற்றுள்ளன. ஆபத்துக்கள் எந்த வடிவில் வரும் என்பதை எம்மால் அறிய முடியாது. அதனால் எப்போதுமே நாம் அவதானமாக செயற்பட வேண்டும். இலங்கையில் நாளொன்றில் 2 மணித்தியாலம் 49 நிமிடத்துக்குள் ஒருவர் வாகன விபத்தில் இறக்கின்றார்.
இந்த விபத்துகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக அரசாங்கத்திலிருந்து 30 இலட்சம் ரூபா வரை பணம் செலவிடப்படுகின்றது. இதனால் எமது பொருளாதாரத்துக்கே பெரிதும் பாதிப்பு ஏற்படுகின்றது.
மதுபானம் அருந்தி போதைப்பொருட்களை பயன்படுத்திவிட்டு வாகனங்களை செலுத்துபவர்களாலே விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. கடந்த வருடம் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த வருடம் மாத்திரம் வாகன விபத்துகளால் 30 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM