இன, மத வேறு­பாட்டைத் தூண்டும் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் மக்கள் மிகவும் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும் 

Published By: MD.Lucias

05 Dec, 2015 | 10:16 AM
image

இன, மத வேறு­பாட்டை தூண்டும் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் இருந்து மக்கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும் என துறை­மு­கங்கள் மற்றும் கப்பல் துறை அலு­வல்கள் அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்தார்.

தனது 52ஆவது பிறந்த தினத்தை முன்­னிட்டு மினு­வாங்­கொடை ரஜ­மஹா விஹா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

நான் இன்று என்­னு­டைய பிறந்த தினத்தை கொண்­டாட வில்லை. நாங்கள் நல்­லாட்சி அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தற்கு ஐக்­கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்­கிர­ம­சிங்­க­வுடன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­த­மொன்றில் கைச்­சாத்­திட்­டது கடந்த டிசம்பர் 1ஆம் திக­தி­யாகும். அது எனது பிறந்த தினத்தை விடவும் முக்­கி­ய­மா­ன­தாகும்.

சர்­வா­தி­கார ஆட்­சியில் இருந்து மக்­களை பாது­காத்­துக்­கொண்டு மக்­க­ளுக்கு சார்­பா­னதும் நாட்­டுக்கு ஏது­வா­ன­து­மான அர­சாங்­க­மொன்றை அமைப்­ப­தற்கு முடி­யு­மா­னது எனது பிறந்த தினத்தை விடவும் முக்­கிய விட­ய­மாக கரு­து­கின்றேன். நாட்­டுக்கு தற்­போது சிறந்த இரண்டு தலை­வர்கள் இருக்­கின்­றனர்.அத­னூ­டாக இது­வ­ரை­கா­லமும் நாட்டில் இடம்­பெற்று வந்த சர்­வா­தி­கார ஆட்சி கலா­சா­ரத்தை முடி­வுக்கு கொண்­டு­வர முடி­யு­மானதாக இருக்­கின்­றது. எதிர்­கா­லத்தில் நாட்டை எத்­தி­சைக்கு கொண்டு செல்­வது? எவ்­வா­றான பொரு­ளா­தார கொள்கை அவ­சியம் போன்ற விட­யங்­களை பாரா­ளு­மன்றம் மற்றும் அமைச்­ச­ர­வைக்குள் ஆராய்ந்து வரு­கின்றோம்.

கொழும்பில் ஆரம்­பித்த என்­னு­டைய அர­சியல் பய­ணத்தை களுத்­து­றையில் இருந்து கம்­ப­ஹா­வுக்கு எடுத்து வந்தது நான் பிறந்த பிர­தே­சத்­துக்கு என்னால் முடிந்த சேவை­களை மேற்­கொள்­வ­தற்­காகும். அதற்­காக நாங்கள் அனை­வரும் கட்­சி­பே­தங்­களை மறந்து ஒன்­றாக கைகோர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இன்­றி­ருக்கும் உண்­மை­யான தலை­வர்­க­ளூ­டாக நாட்டை சிறந்­த­தொரு மாற்­றத்­துக்கு கொண்டு செல்ல வில்­லை­யென்றால், நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு தூர­நோக்­கு­டைய தலை­மைகள் மீண்டும் எப்­போது உரு­வாவார்கள் என்­பது சந்­தே­க­மா­கவே இருக்­கின்­றது. இன்று சிலர் இன, மத வேறு­பாட்டை தூண்டி விட்டு தங்களது அரசியலை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர் என்­றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31