இன, மத வேறுபாட்டை தூண்டும் அரசியல்வாதிகளிடம் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
தனது 52ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மினுவாங்கொடை ரஜமஹா விஹாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
நான் இன்று என்னுடைய பிறந்த தினத்தை கொண்டாட வில்லை. நாங்கள் நல்லாட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது கடந்த டிசம்பர் 1ஆம் திகதியாகும். அது எனது பிறந்த தினத்தை விடவும் முக்கியமானதாகும்.
சர்வாதிகார ஆட்சியில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொண்டு மக்களுக்கு சார்பானதும் நாட்டுக்கு ஏதுவானதுமான அரசாங்கமொன்றை அமைப்பதற்கு முடியுமானது எனது பிறந்த தினத்தை விடவும் முக்கிய விடயமாக கருதுகின்றேன். நாட்டுக்கு தற்போது சிறந்த இரண்டு தலைவர்கள் இருக்கின்றனர்.அதனூடாக இதுவரைகாலமும் நாட்டில் இடம்பெற்று வந்த சர்வாதிகார ஆட்சி கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவர முடியுமானதாக இருக்கின்றது. எதிர்காலத்தில் நாட்டை எத்திசைக்கு கொண்டு செல்வது? எவ்வாறான பொருளாதார கொள்கை அவசியம் போன்ற விடயங்களை பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவைக்குள் ஆராய்ந்து வருகின்றோம்.
கொழும்பில் ஆரம்பித்த என்னுடைய அரசியல் பயணத்தை களுத்துறையில் இருந்து கம்பஹாவுக்கு எடுத்து வந்தது நான் பிறந்த பிரதேசத்துக்கு என்னால் முடிந்த சேவைகளை மேற்கொள்வதற்காகும். அதற்காக நாங்கள் அனைவரும் கட்சிபேதங்களை மறந்து ஒன்றாக கைகோர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இன்றிருக்கும் உண்மையான தலைவர்களூடாக நாட்டை சிறந்ததொரு மாற்றத்துக்கு கொண்டு செல்ல வில்லையென்றால், நாட்டை கட்டியெழுப்புவதற்கு தூரநோக்குடைய தலைமைகள் மீண்டும் எப்போது உருவாவார்கள் என்பது சந்தேகமாகவே இருக்கின்றது. இன்று சிலர் இன, மத வேறுபாட்டை தூண்டி விட்டு தங்களது அரசியலை கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM