(நா.தனுஜா)
எமது கட்சிக்குள்ளிருக்கும் பிரச்சினையைப் பூதாகரமாக்கி, அதனை மாத்திரமே ஊடகங்கள் காண்பித்து ஏனைய பிரச்சினைகளை மறக்கடிப்பதன் மூலம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளுந்தரப்பினர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு எமது தரப்பிலிருக்கும் சிலர் வாய்ப்பேற்படுத்திக் கொடுக்கிறார்களா என்ற சந்தேகம் எழுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மரக்கறிகளின் விலைகள் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன. 2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த நிலை தற்போது 'கோட் சூட்டில்' மீண்டும் வந்திருக்கிறதா என்று கருதக்கூடிய நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் அதுகுறித்து யாரும் பேசவில்லை. மாறாக ரஞ்சன் ராமநாயக்கவின் கைது மற்றும் எமது கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகள் மாத்திரம் பெரிதுபடுத்திக் காண்பித்து, ஏனைய முக்கிய பிரச்சினைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அவதானம் திசைதிருப்பப்பட்டிருக்கிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM